NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை 
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை 

    எழுதியவர் Nivetha P
    Apr 26, 2023
    07:12 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, கொல்கத்தா போன்ற வடமாநிலத்திற்கு தினமும் ஏராளமான ரயில்கள் சென்று வருவது வழக்கம்.

    சில தென் மாவட்டங்களுக்கும் இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று(ஏப்ரல்.,25) இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும்,

    சிறிதுநேரத்தில் அது வெடித்து சிதறும் என்றும் கூறிவிட்டு அழைப்பினை துண்டித்துள்ளார்.

    இதனையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்பரில், பூக்கடை காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் பாக்யராஜ் தலைமையில் அழைப்பு வந்த தொலைபேசி எண் குறித்து விசாரணை செய்யப்பட்டது.

    அதில் அந்த அழைப்பானது கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இருந்து வந்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு

    7 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர் விடுத்த மிரட்டல் 

    இதனையடுத்து தனிப்படை போலீசார் சம்பவயிடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது அந்த போனில் பேசியது வியசார்பாடி மல்லிப்பூ காலனியை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் மணிகண்டன்(21) என்பதும், அவர் 7 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

    அதன்படி நேற்று இரவு மணிகண்டனின் தந்தை ராமலிங்கம் அவரை பார்த்து கொள்வதற்காக உடனிருந்துள்ளார்.

    அவர் தூங்கிய நேரத்தில் செல்போனை எடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மணிகண்டன் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனை தொடர்ந்து தற்போது மணிகண்டனின் தந்தை ராமலிங்கத்திற்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து திரும்பி வந்துள்ளனர்.

    இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய்களுடன் ரயில் நிலையம் சென்று சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ரயில்கள்
    அரசு மருத்துவமனை
    காவல்துறை

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    சென்னை

    சென்னை ஆருத்ரா விவகாரம் - பாஜக நிர்வாகிகள் ஆஜராக சம்மன்  பாஜக
    சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்  தங்கம் வெள்ளி விலை
    செக் மோசடி வழக்கில் டைரக்டர் லிங்குசாமிக்கு சிறைத்தண்டனை; உறுதி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம் கோலிவுட்
    சென்னையில் 10ம் வகுப்பு கணித தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி  காவல்துறை

    ரயில்கள்

    ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை போக்குவரத்து விதிகள்
    அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு வந்தே பாரத்
    ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் அதிவேக ரயில், சீனாவில் அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் இதோ வந்தே பாரத்
    பொம்மையை ஒப்படைக்க ஒரு குழந்தையை வலைவீசி தேடிய ரயில்வே அதிகாரிகள்! இந்தியா

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  தமிழ்நாடு
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்

    காவல்துறை

    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது தமிழ்நாடு
    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல் தமிழ்நாடு
    தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம் கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025