NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை 
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை 
    இந்தியா

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை 

    எழுதியவர் Nivetha P
    April 26, 2023 | 07:12 pm 0 நிமிட வாசிப்பு
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை 
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, கொல்கத்தா போன்ற வடமாநிலத்திற்கு தினமும் ஏராளமான ரயில்கள் சென்று வருவது வழக்கம். சில தென் மாவட்டங்களுக்கும் இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று(ஏப்ரல்.,25) இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சிறிதுநேரத்தில் அது வெடித்து சிதறும் என்றும் கூறிவிட்டு அழைப்பினை துண்டித்துள்ளார். இதனையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பரில், பூக்கடை காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் பாக்யராஜ் தலைமையில் அழைப்பு வந்த தொலைபேசி எண் குறித்து விசாரணை செய்யப்பட்டது. அதில் அந்த அழைப்பானது கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இருந்து வந்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    7 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர் விடுத்த மிரட்டல் 

    இதனையடுத்து தனிப்படை போலீசார் சம்பவயிடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த போனில் பேசியது வியசார்பாடி மல்லிப்பூ காலனியை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் மணிகண்டன்(21) என்பதும், அவர் 7 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது. அதன்படி நேற்று இரவு மணிகண்டனின் தந்தை ராமலிங்கம் அவரை பார்த்து கொள்வதற்காக உடனிருந்துள்ளார். அவர் தூங்கிய நேரத்தில் செல்போனை எடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மணிகண்டன் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது மணிகண்டனின் தந்தை ராமலிங்கத்திற்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து திரும்பி வந்துள்ளனர். இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய்களுடன் ரயில் நிலையம் சென்று சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    ரயில்கள்
    அரசு மருத்துவமனை
    காவல்துறை
    காவல்துறை

    சென்னை

    சென்னை கலாஷேத்ரா விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்
    தொடர்ச்சியாக உயரும் தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!  வணிக செய்தி
    அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்!  விமான சேவைகள்
    சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை

    ரயில்கள்

    கேரளா வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி புகைப்படம் - கடும் கண்டனம்! வந்தே பாரத்
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வழித்தடம்!  வந்தே பாரத்
    குஜராத் மாநில போதட் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் தீ விபத்து  குஜராத்
     சென்னையில் போக்குவரத்துக்கு ஒரே பயண டிக்கெட்! சட்டப்பேரவையில் அறிவிப்பு சென்னை

    அரசு மருத்துவமனை

    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  தமிழ்நாடு
    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா

    காவல்துறை

    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி இந்தியா
    வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் தமிழ்நாடு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம்: CBCIDயின் FIR அறிக்கை வெளியீடு  திருநெல்வேலி
    காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை  சென்னை

    காவல்துறை

    சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை சென்னை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    காதலி தூக்குபோட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன்  தமிழ்நாடு
    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023