NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல்கள் ரஷ்யாவில் இருந்து வந்ததாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல்கள் ரஷ்யாவில் இருந்து வந்ததாக தகவல்
    மாணவர்கள் அனைவரும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்

    டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல்கள் ரஷ்யாவில் இருந்து வந்ததாக தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 01, 2024
    04:40 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று காலை டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள சுமார் 100 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை.

    எனினும் மாணவர்கள் அனைவரும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    பீதியடைந்த பெற்றோர்கள், பள்ளிகளுக்கு வெளியே குவிந்ததால், இது குறித்து உள்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தின் படி, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் ஒரு புரளி எனத்தெரிவித்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் முழுமையான சோதனை நடத்தியதாகவும், எதுவும் கிடைக்கவில்லை என்றும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    தில்லி காவல்துறையின் (குற்றம்) சிறப்பு சிபி ரவீந்தர் யாதவ் கூறுகையில், செவ்வாயன்று சில மருத்துவமனைகளுக்கும் இதுபோன்ற மின்னஞ்சல்கள் வந்துள்ளன.

    மிரட்டல் மின்னஞ்சல்

    பள்ளிகளுக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியது யார்?

    இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின் படி, இந்த மிரட்டல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஐடி அடையாளம் காணப்பட்டுள்ளது.

    காவல்துறை வட்டாரங்களின்படி, மிரட்டல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் முகவரி sawariim@mail.ru ஆகும்.

    இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், 'சவாரிம்' (வாளை மோதுதல் என்று பொருள்) என்ற வார்த்தை அரபு வார்த்தை என்றும், இது IS-ஆல் 2014 முதல் இஸ்லாமிய பிரச்சாரத்தை பரப்புவதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த மிரட்டல் மின்னஞ்சல்களுக்கு பின்னால் ஏதேனும் அமைப்பு சதி உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், மின்னஞ்சல்களை அனுப்பப் பயன்படுத்தப்பட்ட ஐபி முகவரி ரஷ்யாவிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. விபிஎன் மூலம் ஐபி முகவரி மறைக்கப்படலாம் என்று டெல்லி போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளிகள்
    டெல்லி

    சமீபத்திய

    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்
    தாங்கள் உருவாக்கிய அதே AI அமைப்புகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் மைக்ரோசாஃப்ட்
    பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம் சர்வதேச நாணய நிதியம்
    அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் தீபிகா படுகோன்! தீபிகா படுகோன்

    பள்ளிகள்

    தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள் தெலுங்கானா
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம்  தமிழகம்
    அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு

    டெல்லி

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பேசிய ஜெர்மனிக்கு இந்தியா எதிர்ப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உயர்நீதிமன்றத்தில் மனு: உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை  அரவிந்த் கெஜ்ரிவால்
    ED காவலில் இருந்து கொண்டே தனது முதல் உத்தரவை பிறப்பித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  அரவிந்த் கெஜ்ரிவால்
    அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இன்று பெரும் போராட்டம்  ஆம் ஆத்மி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025