NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிறுபான்மையின மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி அம்பலம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிறுபான்மையின மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி அம்பலம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
    சிறுபான்மையின மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி அம்பலம்

    சிறுபான்மையின மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி அம்பலம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 19, 2023
    07:23 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் மிகப்பெரிய போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் மோசடியை கண்டறிந்துள்ள நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    பல ஆண்டுகளாக வழங்கப்படும் இந்த ஸ்காலர்ஷிப் நடைமுறையில், 2016 இல் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கிய பிறகு, சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் மோசடி வெளிச்சத்திற்கு வந்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த விசாரணையில், 21 மாநிலங்களில் 8 கோடிக்கும் அதிகமாக வழங்கப்பட்ட உதவித்தொகை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    அப்போது, 2018-2019 ஆம் ஆண்டிற்கு, அனைத்து 2,239 உதவித்தொகைகளுடன் ஒரே மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் தொடர்புடைய போலி மதரசாக்கள், பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர்.

    background of scam

    மோசடியை கண்டுபிடித்ததன் பின்னணி

    முன்னதாக, 2020இல் ஜார்க்கண்டில் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பில் மோசடி நடந்தது தெரியவந்த பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

    ஜார்க்கண்ட் முதல்வர் இது குறித்து விசாரணை நடத்துவதாகவும் அறிவித்தார்.

    இந்நிலையில், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகமும் ஆய்வு செய்த நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் நடந்த மிகப்பெரிய மோசடி அம்பலமானது.

    இதில் இடைத்தரகர்கள் மட்டுமல்லாது, வங்கி அதிகாரிகள், பள்ளி பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களை உள்ளடக்கிய நெட்வொர்க் மூலம் மாணவர்களுக்கான நிதியை திசை திருப்புவது தெரிய வந்துள்ளது.

    2007-2008 ஆம் ஆண்டில் தேசிய சிறுபான்மை ஆணையம் நிறுவப்பட்டது முதல் இந்த திட்டத்தின் கீழ், 11 ஆம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரையிலான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    சிபிஐ

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    மத்திய அரசு

    மதுரையில் AIIMS கட்டிமுடிக்க இன்னும் 3 ஆண்டுகள் ஆகும் எனத்தகவல்  மதுரை
    அமலாக்கத்துறை இயக்குனர் பதவி காலத்தினை நீட்டிக்க மத்திய அரசு கோரிக்கை  உச்ச நீதிமன்றம்
    சென்னை-பெங்களூர் இடையே புல்லட் ரயில் சேவை துவங்க திட்டம் வந்தே பாரத்
    மணிப்பூர் ஒருமைப்பாட்டினை வலியுறுத்தி மத்திய அரசின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை மணிப்பூர்

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  உலகம்
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025