NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாரத், பாரதம், இந்தியா..மூன்றிற்குமான வித்தியாசம் என்ன? அரசியலைப்பின்படி எது சரியான பெயர்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாரத், பாரதம், இந்தியா..மூன்றிற்குமான வித்தியாசம் என்ன? அரசியலைப்பின்படி எது சரியான பெயர்?
    பாரத், பாரதம், இந்தியா..மூன்றிற்குமான வித்தியாசம் என்ன? அரசியலைப்பின்படி எது சரியான பெயர்?

    பாரத், பாரதம், இந்தியா..மூன்றிற்குமான வித்தியாசம் என்ன? அரசியலைப்பின்படி எது சரியான பெயர்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 05, 2023
    05:30 pm

    செய்தி முன்னோட்டம்

    நடைபெறவிருக்கும் ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி, உலக தலைவர்களை இரவு விருந்திற்கு கலந்து கொள்ள, இந்தியாவின் மூத்த குடிமகள் என்ற முறையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.

    ஆனால், அந்த இரவு விருந்திற்கான அழைப்பிதழில் 'இந்திய ஜனாதிபதி' என்று குறிப்பிடுவதற்கு பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது, தற்போது பெரும் சர்ச்சையை துவங்கியுள்ளது.

    இதனை அடுத்து, செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில், இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

    ஆனால், இந்திய அரசியலைப்பின் படி, நமது நாட்டை, எவ்வாறு அழைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோமா?

    card 2

    பாரத் என்றால் என்ன?

    சம்ஸ்கிருத நூல்களின் படி, பாரத் என்ற சொல்லிற்கு இரு பொருள்கள் இருக்கிறதாம். ஒன்று, 'தாங்க/ சுமக்க', மற்றொன்று, 'அறிவை தேடுபவர்'.

    பழம்பெரும் வரலாறு கொண்ட நம் இந்தியாவை, முற்காலத்தில் பாரதம் என்று தான் அழைத்து வந்தனர் என்பது வரலாறு தெரிந்த அனைவரும் அறிந்ததே.

    பாரதம், பாரத், பாரதவர்ஷ், பாரத்மாத என பல பெயர்களில் பாரதகண்டத்தை அழைத்தனர். இதற்கான குறிப்பும் பல புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.

    card 3

    வேதங்களிலும், இதிகாசங்களிலும் குறிப்பிடுவது என்ன?

    பரதம் என்ற பெயர் வேதபுத்தகங்களில் இடம்பெற்றுள்ளதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    1 . ரிக் வேதத்தில், இது பரத குல அரசனின் பெயராக கூறப்படுகிறது

    2 . மகாபாரதத்தின் துவக்கமே இந்த பெயரில் இருந்து தான். துஷ்யந்த மகாராஜா மற்றும் சகுந்தலைக்கு பிறந்த மகன் பாரத் எனவும், அவரின் வழித்தோன்றல்களே பாண்டவர்களும், கௌரவர்களும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    3 . ராமாயணத்தில், ராமனின் இளைய சகோதரன் பெயர் பரதன்.

    4 . நாட்டிய சாஸ்திரத்தின் ஆசிரியரும், நாடக கலைகள் பற்றி விளக்கம் தந்தவரும் பரதர்.

    5 . ரிஷப முனிவரின் மகன் பெயர் பரதன்

    card 4

    ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

    'தி ரிலீஜியன்ஸ் ஆப் இந்தியா' என்ற புத்தகத்தை எழுதிய ரோஷன் தலால் என்பவர், 'பாரதவர்ஷம்' என்ற நிலப்பரப்பு ஜம்புத்தீவின் ஒரு பகுதியாக இருந்துள்ளதாக புராணங்கள் கூறுகிறது என குறிப்பிடுகிறார்.

    அதேபோல, 'பாரதவர்ஷா' என்ற பெயர், துஷ்யந்த மகாராஜாவின் மகன் பரத்திடம் இருந்து வந்தது என கூறுகிறார்.

    மேலும், 'பாரத மாதா' என்ற பெயர், 19 ஆம் நூற்றாண்டில் தான் தோன்றியதாகவும், அதற்கான ஒரு உருவம் தந்து, ஒரு கோவிலை கட்டி, அதை, வாரணாசியில், 1936 -இல் மகாத்மா காந்தி திறந்து வைத்ததாகவும் கூறுகிறார்.

    card 5

    அரசியலமைப்பு கூறுவது என்ன?

    "பாரத்" என்ற சொல் அரசியலமைப்பிலும் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று இந்திய அரசியலமைப்பின் பிரிவு 1இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட ஜி20 கையேட்டிலும் "பாரத்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் MP, சஷி தரூர், "நாட்டின் இரண்டு அதிகாரப்பூர்வ பெயர்களில் ஒன்றான இந்தியாவை "பாரத்" என்று அழைப்பதில் அரசியலமைப்பு ஆட்சேபனை இல்லை என்றாலும், பல நூற்றாண்டுகளாக கட்டமைக்கப்பட்ட கணக்கிட முடியாத பிராண்ட் மதிப்பைக் கொண்ட "இந்தியா" யை முற்றிலும் கைவிடும் அளவுக்கு அரசாங்கம் முட்டாள்தனமாக இருக்காது என்று நம்புகிறேன்.. உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்ட, வரலாற்றின் மறுபெயருக்கான எங்கள் உரிமைகோரலை கைவிடுவதற்குப் பதிலாக, இரண்டு சொற்களையும் நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.' என கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    இந்தியா

    இந்தியாவில் லேப்டாப்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் 38 நிறுவனங்கள் வணிகம்
    உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள அரிசி வகைகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் உலகம்
    100 கிராம் பம்ப்கின் விதைகள் - மறைந்திருக்கும் நன்மைகள்  உலகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் வரலாறு வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025