NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் புதிய படங்களை வெளியிட்டுள்ளது NIA 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் புதிய படங்களை வெளியிட்டுள்ளது NIA 
    புதிய புகைப்படத்தில், அந்த சந்தேக நபர், தொப்பி மற்றும் முகமூடி அணியாமல், பேருந்தில் பயணிப்பது போல் உள்ளது pc: இந்தியா டுடே

    ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் புதிய படங்களை வெளியிட்டுள்ளது NIA 

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 07, 2024
    06:24 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூருவிலுள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபேவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சந்தேக நபரின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது தேசிய புலனாய்வு துறை.

    இந்த புதிய புகைப்படத்தில், அந்த சந்தேக நபர், தொப்பி மற்றும் முகமூடி அணியாமல், பேருந்தில் பயணிப்பது போல் உள்ளது.

    இந்த புகைப்படத்தை வெளியிட்டு, அந்த நபரை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடுயுள்ளது NIA.

    கிழக்கு பெங்களூருவில் உள்ள புரூக்ஃபீல்டில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில், மார்ச் 1 ஆம் தேதி நடந்த வெடிவிபத்தில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.

    அதனை தொடர்ந்து விசாரணையை துவங்கிய NIA, CCTV காட்சிகளை ஆராய்ந்ததில், குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தொப்பி, முகமூடி மற்றும் கண்ணாடி அணிந்து ஓட்டலுக்குள் நுழையும் புகைப்படத்தை வெளியிட்டது.

    புலனாய்வு 

    மக்களின் உதவியை நாடும் NIA

    பிரதான சந்தேக நபராக வெளிப்பட்ட அடையாளம் தெரியாத நபரைப் பற்றிய தகவல்களை மக்கள் அனுப்பக்கூடிய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்களை நிறுவனம் பகிர்ந்து கொண்டது.

    மேலும் தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு உறுதி அளித்துள்ளது.

    ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை இந்த வார தொடக்கத்தில் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இம்ப்ரூவைஸ்டு எக்ஸ்ப்ளோசிவ் டிவைஸ் (IED) மூலம் இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    குண்டுவெடிப்பு நடந்த உடனேயே, கர்நாடக காவல்துறை கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    பெங்களூர்

    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்  சென்னை
    இந்திய ஆடவர் அணி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன் இந்திய கிரிக்கெட் அணி
    தொடங்கப்படாத புக்கிங்: துருவநட்சத்திரம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் என்ன? கௌதம் வாசுதேவ் மேனன்
    சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சாம் ஆல்ட்மேனை வைத்து 'நம்ம யாத்ரி' விளம்பர நோட்டிஃபிகேஷன் ஓபன்ஏஐ

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025