கவரைப்பேட்டை ரயில் விபத்து; மீண்டும் தொடங்கியது மீட்பு பணிகள்; விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழு ஆய்வு
செய்தி முன்னோட்டம்
மைசூர்-தர்பங்கா எக்ஸ்பிரஸ் திருவள்ளூர் அருகே உள்ள கவரைப்பேட்டையில் விபத்துக்குள்ளானதை அடுத்து, பயணிகளுக்கு உதவுவதற்காக தென்னக ரயில்வே டாக்டர் எம்ஜிஆர் சென்னை ரயில் நிலையத்தில் உதவி மையத்தை அமைத்தது.
இதற்கிடையில், விபத்து நடந்த இடத்தில் மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
உதவி எண்கள் சென்னை கோட்டம் மற்றும் ரயில் பாதையில் உள்ள மற்ற நிலையங்களிலும் வழங்கப்பட்டுள்ளன.
ரயில்வே அமைச்சகம் சமூக வலைதளங்கள் மூலம் தகவல் அளித்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின்படி, பின்வரும் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை கோட்டம்: 04425354151, 04424354995
சமஸ்திபூர்: 8102918840
தர்பங்கா: 8210335395
டானாபூர்: 9031069105
டிடியு சந்திப்பு: 7525039558
பயணிகள்
19 பயணிகள் காயம்
மைசூர்-தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் கவரப்பேட்டையில் சரக்கு ரயில் மீது மோதியதில் வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
மோதலுக்குப் பிறகு, 12-13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பயணிகள் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மெயின் லைனில் செல்லாமல் லூப் லைனில் ரயில் திருப்பியதே விபத்துக்கு காரணம் என தெற்கு ரயில்வே முதற்கட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த பயங்கர விபத்தைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நிலைமையை ஆய்வு செய்து, மைசூர்-தர்பங்கா எக்ஸ்பிரஸ் விபத்து குறித்த தகவலைப் பெற்று ஆலோசனைகளை வழங்கினார்.
விபத்திற்கான காரணம்
விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை
ரயில் விபத்தில் காயமடைந்து சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.
மேலும், விபத்து நடந்த தகவல் கிடைத்த உடனேயே அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் மாவட்ட அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் உதவுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மீட்புப் பணிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், விபத்து எதனால் ஏற்பட்டது என்பதற்கான விரிவான காரணத்தை கண்டறிவதற்காக தெற்கு ரயில்வேயின் வல்லுநர் குழு ஆய்வு செய்து வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
நிபுணர் குழு ஆய்வு
#NewsUpdate | திருவள்ளூர்: கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கான காரணம் குறித்து தெற்கு ரயில்வே வல்லுநர் குழு ஆய்வு!#SunNews | #TrainAccident | #Kavaraipettai pic.twitter.com/1x2z8nvjme
— Sun News (@sunnewstamil) October 12, 2024
ட்விட்டர் அஞ்சல்
மீட்புப் பணிகள் மீண்டும் தொடக்கம்
#JUSTIN | கவரைப்பேட்டை அருகே ரயில் விபத்து நடந்த பகுதியில் மழை விட்டுள்ளதால் மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கியது!#SunNews | #TrainAccident | #Kavaraipettai https://t.co/UkJaZ3Kvr1
— Sun News (@sunnewstamil) October 12, 2024