NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    இந்தியா

    கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    May 30, 2023 | 12:42 pm 0 நிமிட வாசிப்பு
    கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகளை செய்ய சிறப்பு தகுதிகளை பெற்ற மருத்துவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா உள்ளிட்ட இந்திய மருத்துவ முறையான ஆயுஷ் மருத்துவ படிப்புகளினை முடித்து, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்வதற்கான சான்றிதழ் முடித்த மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கான அனுமதியினை வழங்க மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு ஆயுஷ் ஒலியியல் பரிசோதனையாளர்கள் சங்கம் இந்த வழக்குக்கான மனுவில் கோரியுள்ளனர். அதன்படி இந்த வழக்கானது நீதிபதியான எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மனுவினை தள்ளுபடி செய்தார் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் 

    அப்போது மனுவினை விசாரித்த நீதிபதி, சிசு பாலின தேர்வு தடை சட்டத்தின்படி, கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் மேற்கொள்ள பல சிறப்பு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட தகுதிகளை பெற்ற மருத்துவர்கள் மட்டுமே அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை மேற்கொள்ள தகுதியுள்ளவர்கள். இத்தகைய சிறப்பு தகுதிகளை பெறாத மருத்துவர்களுக்கு இந்த பரிசோதனைகள் செய்ய தகுதியில்லை என்று தெரிவித்தார். மேலும் அவர், மனுதாரரான சங்க உறுப்பினர்கள் இசிஜி, எக்ஸ்ரே போன்ற அடிப்படையான பயிற்சிகளை மட்டுமே பெற்றுள்ளனர். ஸ்கேன் செய்வதற்கான தகுதியினை அவர்கள் பெறவில்லை. அதனால் அவர்களுக்கு இதற்கான அனுமதியினை வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை உயர் நீதிமன்றம்
    ஆயுர்வேதம்
    யோகா

    சென்னை உயர் நீதிமன்றம்

    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்  தமிழ்நாடு
    RTE-ல் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது அரசின் கடமை - சென்னை உயர்நீதிமன்றம்  தமிழ்நாடு
    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி
    புகையிலைக்கு அரசு தடை விதிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை

    ஆயுர்வேதம்

    தரம் குறைந்த ஆயுர்வேத மருந்துகள் விற்ற கும்பல் பிடிபட்டது! 10 பேர் கைது!  ஆயுர்வேத மருந்து
    மருத்துவம்: ஆயுர்வேதமும், அதை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளும் ஆரோக்கியம்
    ஆயுர்வேத முறைப்படி, தினமும் ஆயில் புல்லிங் செய்யும் நடிகை அதிதி ராவ் ஆயுர்வேத குறிப்புகள்
    மருத்துவ குணங்கள் நிரம்பிய சந்தனத்தை உபயோகிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஆயுர்வேத மருந்து

    யோகா

    யோகாவிற்கு புதிதா? இந்த ஆசனங்களில் இருந்து துவங்குங்கள் உடற்பயிற்சி
    யோகா: பதட்டமாய் உணருகிறீர்களா? இந்த சுவாசப் பயிற்சிகளை முயற்சிக்கவும் மன ஆரோக்கியம்
    உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க சில யோகா ஆசனங்கள் வாழ்க்கை முறை நோய்கள்
    மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாவின் நன்மைகள் ஆரோக்கியம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023