NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மிக்ஜாம் புயலும் தத்தளிக்கும் சென்னையும்; காய்கறிகளின் விலை உயர்வு; ATM மையங்கள் முடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிக்ஜாம் புயலும் தத்தளிக்கும் சென்னையும்; காய்கறிகளின் விலை உயர்வு; ATM மையங்கள் முடக்கம்
    மிக்ஜாம் புயலும் தத்தளிக்கும் சென்னையும்; காய்கறிகளின் விலை உயர்வு; ATM மையங்கள் முடக்கம்

    மிக்ஜாம் புயலும் தத்தளிக்கும் சென்னையும்; காய்கறிகளின் விலை உயர்வு; ATM மையங்கள் முடக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 07, 2023
    10:49 am

    செய்தி முன்னோட்டம்

    மிக்ஜாம் புயலின் தாக்கத்திலிருந்து சென்னையின் பல பகுதிகள் மெல்ல மீண்டு வருகிறது. இருப்பினும் இன்னும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு போன்ற இடங்களில் வெள்ளநீர் விடியவில்லை.

    அதேபோல, தாழ்வு இடங்களில் வெள்ளநீரும், சாக்கடை நீரும் கலந்துள்ளதால், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

    இந்த நிலையில் பல வீடுகளில் தரைத்தளம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதனிடையே மக்களுக்கு படகு மூலமும், ஹெலிகாப்டர் மூலமும் உணவு பொருட்களை வழங்கி வருகிறது அரசு.

    அதேபோல, பல இடங்களில் ஜெனெரேட்டரை இயக்க டீசல் தேவைப்படுவதால், பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    card 2

    காய்கறிகள் விலையேற்றம், ATM முடக்கம் 

    புயல் மழை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது.

    இதனால், காய்கறிகளின் மொத்த விலையும், சில்லறை விலையும் அதிகரித்துள்ளது.

    தக்காளி, இஞ்சி, அவரை போன்ற காய்கறிகளின் விலை ஒரே வாரத்தில் அதிகரித்துள்ளது.

    இன்றைய நிலவரப்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.55 , தக்காளி ரூ.35 , இஞ்சி ரூ.90 என விற்கப்படுகிறது.

    போக்குவரத்து சீரானதும், காய்கறிகளின் விலை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல வங்கிகளுக்கு பொதுமுறை அறிவிக்கப்பட்டதால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் நகரின் பல ATM மையங்கள் முடங்கியுள்ளது.

    பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல இடங்களில் பணபரிவர்த்தனையை மட்டுமே ஏற்றுக்கொள்வதில், பொதுமக்கள் ATM மூலம் பணம் எடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கோயம்பேடு
    வெள்ளம்

    சமீபத்திய

    தாங்கள் உருவாக்கிய அதே AI அமைப்புகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் மைக்ரோசாஃப்ட்
    பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம் சர்வதேச நாணய நிதியம்
    அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் தீபிகா படுகோன்! தீபிகா படுகோன்
    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்   மு.க.ஸ்டாலின்

    சென்னை

    சென்னையில் தொடரும் மழை: 3 நாட்களில் தமிழக-ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்க இருக்கும் சூறாவளி புயல் தமிழ்நாடு
    தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 மீட்புப்படையினர், 1100 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணி
    பருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை வானிலை அறிக்கை
    டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை  கனமழை

    கோயம்பேடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உயரும் தக்காளி விலை  தமிழ்நாடு
    தீபாவளிக்கு மறுநாள், நவ.,13ஆம் தேதி, கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது  சென்னை
    வரத்து குறைந்த சின்ன வெங்காயம்; கிலோ 110க்கு விற்பனை தமிழ்நாடு

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025