NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / SCO மாநாடு: சீனாவின் BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்தது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    SCO மாநாடு: சீனாவின் BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்தது இந்தியா
    உலக நாடுகளில் இந்தியா மட்டுமே BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்திருக்கிறது.

    SCO மாநாடு: சீனாவின் BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்தது இந்தியா

    எழுதியவர் Sindhuja SM
    Jul 05, 2023
    01:51 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு ஆன்லைனில் நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோரும் ஆன்லைன் மூலம் பங்கேற்றனர்.

    இந்த உச்சிமாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட புது டெல்லி பிரகடனத்தில், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் மிக முக்கியமான திட்டமாக கருதும் பெல்ட் அண்ட் ரோட்ஸ் முன்முயற்சியை(BRI) ஆதரிக்கும் பத்தியில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது.

    SCO அமைப்பு என்பது சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளின் கூட்டு அமைப்பாகும்.

    இந்த நாடுகளில் இந்தியா மட்டுமே BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்திருக்கிறது.

    உபோதி

    BRI முன்முயற்சி என்றால் என்ன? இந்தியா அதை ஏன் எதிர்க்கிறது?

    பெல்ட் அண்ட் ரோட்ஸ் முன்முயற்சி என்பது 2013ஆம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கால் முன்மொழியப்பட்டதாகும்.

    கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவை ரோடுகள் மூலமாக இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டமே இந்த BRI திட்டமாகும்.

    இந்த திட்டம், தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, மத்திய ஆசியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவுடன் சீனாவை தரைவழியாக(ரோடுகள் மூலம்) இணைக்கிறது.

    இது தவிர, இந்த திட்டத்தில் கடல் வழி பாதைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

    இப்படி இணைக்கப்படும் ரோடுகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர்(POK) வழியாகாவும் செல்கிறது.

    இதற்கு பாகிஸ்தான் ஒப்புதல் தெரிவித்திருந்தாலும், இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை நேரடியாக மீறுகிறது என்று இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கிறது.

    இதற்காகவே, இந்தியா BRI திட்டத்தை ஆதரிக்க மறுக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சீனா
    ஜி ஜின்பிங்
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்
    எச்டிஎஃப்சி வங்கியுடன் இணையும் எச்டிஎஃப்சி.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள் ஹெச்டிஎஃப்சி
    'விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி செலவிடுகிறோம்': பிரதமர் மோடி நரேந்திர மோடி
    தாக்காளியின் விலையைக் கட்டுப்படுத்த போட்டி ஒன்றை அறிவித்தது நுகர்வோர் நலத்துறை வணிகம்

    சீனா

    சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான் பாகிஸ்தான்
    வெளியானது 'ஷாவ்மி 13 அல்ட்ரா'.. என்னென்ன வசதிகள்?  ஸ்மார்ட்போன்
    சூப்பர்சோனிக் 'உளவு' ட்ரோன்களை அனுப்ப இருக்கும் சீனா: அமெரிக்க உளவுத்துறை  அமெரிக்கா
    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  இந்தியா

    ஜி ஜின்பிங்

    32,808 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் சீனா: காரணம் என்ன  உலகம்
    சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன் சீனா
    SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் சீன, ரஷ்ய அதிபர்கள் நரேந்திர மோடி

    நரேந்திர மோடி

    தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025