NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர்
    இந்தியா

    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர்

    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 10, 2023, 06:38 pm 1 நிமிட வாசிப்பு
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர்
    காசிரங்கா தேசிய பூங்காவில் 2,200 பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன

    அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஹாலிவுட் நட்சத்திரமும் காலநிலை ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் மாநிலத்திற்குச் வருமாறு இன்று(பிப் 10) அழைப்பு விடுத்தார். ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாடுவதைத் தடுக்கும் மாநில அரசின் முயற்சிகளுக்கு டிகாப்ரியோ இன்ஸ்டாகிராமில் பாராட்டு தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த அசாம் முதலமைச்சர், "வனவிலங்குகளைப் பாதுகாப்பது எங்கள் கலாச்சார அடையாளத்தின் ஒரு பகுதியாகும். எங்கள் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அர்ப்பணிப்புடன் விடாமுயற்சியோடு நாங்கள் பாதுகாத்து வருகிறோம்." என்று கூறி, லியோனார்டோவை காசிரங்கா மற்றும் மாநிலத்திற்குச் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    அசாம் அரசாங்கத்தைப் பாராட்டிய லியோனார்டோ டிகாப்ரியோ

    லியோனார்டோ டிகாப்ரியோ, ஒரு தீவிர சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். அவர் லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளையின் மூலம் வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் பணியாற்றி வருகிறார். டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பதிவில், காசிரங்கா தேசியப் பூங்காவில் அழிந்து வரும் பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாடுவதை நிறுத்த சர்மா தலைமையிலான அசாம் அரசாங்கம் 2021இல் எடுத்த முடிவைக் குறிப்பிட்டுள்ளார். "2000-2021க்கு இடையில் சுமார் 190 விலங்குகள் கொம்புகளுக்காக கொல்லப்பட்டன. ஆனால், அசாம் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளினால் 1977க்கு பிறகு முதமுறையாக 2022ஆவது வருடத்தில் எந்த காண்டாமிருகமும் அதன் கொம்புகளுக்காக கொல்லப்படவில்லை." என்று கூறிய லியோனார்டோ அதற்கு பாராட்டுகளையும் தெரிவித்திருக்கிறார். இந்த கம்பீரமான மிருகங்களின் கொம்புகள் மருத்துவ குணமுடையதாக நம்பப்படுகிறது. மேலும், இவை நகைகள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    முதல் அமைச்சர்
    இந்தியா
    அசாம்

    முதல் அமைச்சர்

    கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி கோலிவுட்
    கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, விரைவில் நவீன இயந்திரம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு  தமிழ்நாடு
    'எனது காரும் சிக்னலில் நின்று செல்லும்' - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி  புதுச்சேரி
    கர்நாடகா முதல்வராக பதவியேற்கிறார் சித்தராமையா  கர்நாடகா

    இந்தியா

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் ஜப்பான்
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மணிப்பூர்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  டெல்லி
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை

    அசாம்

    அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையினை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    'பெண் சிங்கம்' என்று அழைக்கப்படும் பெண் போலீஸ் கார் விபத்தில் பலி  கார்
    உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி  இந்தியா
    பலதார மணத்தை தடை செய்ய நடவடிக்கை: நிபுணர் குழுவை அமைத்தது அசாம் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023