NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர்
    காசிரங்கா தேசிய பூங்காவில் 2,200 பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன

    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 10, 2023
    06:38 pm

    செய்தி முன்னோட்டம்

    அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஹாலிவுட் நட்சத்திரமும் காலநிலை ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் மாநிலத்திற்குச் வருமாறு இன்று(பிப் 10) அழைப்பு விடுத்தார்.

    ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாடுவதைத் தடுக்கும் மாநில அரசின் முயற்சிகளுக்கு டிகாப்ரியோ இன்ஸ்டாகிராமில் பாராட்டு தெரிவித்திருந்தார்.

    அதற்கு பதிலளித்த அசாம் முதலமைச்சர், "வனவிலங்குகளைப் பாதுகாப்பது எங்கள் கலாச்சார அடையாளத்தின் ஒரு பகுதியாகும். எங்கள் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அர்ப்பணிப்புடன் விடாமுயற்சியோடு நாங்கள் பாதுகாத்து வருகிறோம்." என்று கூறி, லியோனார்டோவை காசிரங்கா மற்றும் மாநிலத்திற்குச் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    அசாம்

    அசாம் அரசாங்கத்தைப் பாராட்டிய லியோனார்டோ டிகாப்ரியோ

    லியோனார்டோ டிகாப்ரியோ, ஒரு தீவிர சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். அவர் லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளையின் மூலம் வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் பணியாற்றி வருகிறார்.

    டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பதிவில், காசிரங்கா தேசியப் பூங்காவில் அழிந்து வரும் பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாடுவதை நிறுத்த சர்மா தலைமையிலான அசாம் அரசாங்கம் 2021இல் எடுத்த முடிவைக் குறிப்பிட்டுள்ளார்.

    "2000-2021க்கு இடையில் சுமார் 190 விலங்குகள் கொம்புகளுக்காக கொல்லப்பட்டன. ஆனால், அசாம் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளினால் 1977க்கு பிறகு முதமுறையாக 2022ஆவது வருடத்தில் எந்த காண்டாமிருகமும் அதன் கொம்புகளுக்காக கொல்லப்படவில்லை." என்று கூறிய லியோனார்டோ அதற்கு பாராட்டுகளையும் தெரிவித்திருக்கிறார்.

    இந்த கம்பீரமான மிருகங்களின் கொம்புகள் மருத்துவ குணமுடையதாக நம்பப்படுகிறது. மேலும், இவை நகைகள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அசாம்
    முதல் அமைச்சர்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் மும்பை
    நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை பிரதமர் மோடி
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி

    அசாம்

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது இந்தியா

    முதல் அமைச்சர்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025