NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆட்சி அமைக்க போவது யார்: கிங் மேக்கர்களாக உருவெடுக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆட்சி அமைக்க போவது யார்: கிங் மேக்கர்களாக உருவெடுக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு 

    ஆட்சி அமைக்க போவது யார்: கிங் மேக்கர்களாக உருவெடுக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 05, 2024
    12:16 pm

    செய்தி முன்னோட்டம்

    2024 மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறாததால், NDA மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான எண்ணிக்கையை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

    அதனையடுத்து, அந்த இரு கூட்டணிகளும் தனித்தனியே இன்று முக்கிய கூட்டங்களை நடத்த உள்ளன.

    பாஜக தலைமையிலான NDA, 543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 294 இடங்களைப் பெற்றுள்ளது.

    எனவே, பெரும்பான்மை எணிக்கையான 272ஐ விட தற்போது NDAவிடம் 22 தொகுதிகள் அதிமாக உள்ளன.

    அதே நேரத்தில், இண்டியா கூட்டணி கட்சிகளிடம் 234 இடங்கள் உள்ளன. இது பெரும்பான்மையை விட 38 இடங்கள் குறைவாகும்.

    எனவே, இரண்டு NDA கூட்டணிக் கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் டிடிபி மற்றும் நிதிஷ் குமாரின் ஜேடியு ஆகியவை கிங் மேக்கர்களாக மாறியுள்ளன.

    இந்தியா 

    ஒரே விமானத்தில் டெல்லிக்கு சென்ற  தேஜஸ்வி யாதவ்-நிதிஷ் குமார்

    சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் எந்த கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அந்த கூட்டணி கட்சிகள் தான் இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியும்.

    அந்த இரு கட்சிகளும் பாஜக கூட்டணியில் நின்று வெற்றி பெற்றிருந்தாலும், அவைகளை இண்டியா கூட்டணி பக்கம் இழுக்க காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன.

    பெரும்பான்மையைப் பெறுவதற்கு, இண்டியா கூட்டணிக்கு ஜேடியு மற்றும் டிடிபி ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவும், அணிசேரா எம்பிக்களின் ஆதரவும் தேவை.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லிக்கு சென்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

    ஆச்சர்யப்படும் வகையில் இண்டியா கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவரான தேஜஸ்வி யாதவ் சென்ற அதே விமானத்தில் நிதிஷ் குமாரும் டெல்லிக்கு சென்றுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாஜக
    சந்திரபாபு நாயுடு
    நிதிஷ் குமார்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    சர்வதேச அளவில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட கேரள நபர் கைது  கேரளா
    ராஜஸ்தானில் மைனர் சிறுமியை பலாத்காரம் செய்து அவளை உயிருடன் எரித்த 2 சகோதரர்களுக்கு மரண தண்டனை  ராஜஸ்தான்
    இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது  குஜராத்
    சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா அருகே பிக்-அப் வாகனம் கவிழ்ந்ததால் 18 பேர் பலி சத்தீஸ்கர்

    பாஜக

    4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் நயினார் நாகேந்திரன்
    கனிமொழி முதல் அண்ணாமலை வரை: இன்றைய தேர்தலில் போட்டியிடும் முக்கிய புள்ளிகள்  தேர்தல்
    கோவையில் ரூ.1,000 கோடி செலவு செய்த எதிர்க்கட்சிகள்: அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு அண்ணாமலை
    ராஜீவ் சந்திரசேகர் குறித்து பொய் பிரச்சாரம் செய்ததாக சசி தரூர் மீது வழக்கு  காங்கிரஸ்

    சந்திரபாபு நாயுடு

    ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி  ஆந்திரா
    குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி  ஆந்திரா
    ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெற்றி ஆந்திரா
    பாஜக கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா சரத் பவார்? காங்கிரஸ்

    நிதிஷ் குமார்

    பீகாரில் 30 பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்து பீகார்
    இந்தியா கூட்டணியில் தொய்வா? பீகார் முதல்வருடன் உரையாடிய மல்லிகார்ஜுன கார்கே  மல்லிகார்ஜுன் கார்கே
    சட்டசபையில் கொச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்  பீகார்
    லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார் மல்லிகார்ஜுன் கார்கே
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025