Page Loader
6வது சம்மனையும் புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்: நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்க போவதாக தகவல் 

6வது சம்மனையும் புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்: நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்க போவதாக தகவல் 

எழுதியவர் Sindhuja SM
Feb 19, 2024
10:52 am

செய்தி முன்னோட்டம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) சம்மனை புறக்கணித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம்-ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. மணீஷ் சிசோடியா போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பணமோசடி வழக்கு விசாரணைக்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், அமலாக்க இயக்குநரகம் அவருக்கு சமீபத்தில் 6வது சம்மனை அனுப்பியது. அந்த சம்மனையும் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார்.

டெல்லி 

இந்த பிரச்சனையை விசாரித்து வரும் டெல்லி நீதிமன்றம்

இதற்கிடையில், அவர் 5 சம்மன்களை புறக்கணித்ததை அடுத்து, அமலாக்க இயக்குனரகம் டெல்லி நீதிமன்றத்தில் அவர் மீது புகார் அளித்தது. அந்த புகாரை பெற்ற டெல்லி நீதிமன்றம் பிப்ரவரி 17ஆம் தேதி அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்பதால் அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கை மார்ச் 16ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உள்ளது. அப்போது அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. இந்நிலையில், அவர் தற்போது 6வது சம்மனையும் புறக்கணித்துள்ளார். மேலும், அமலாக்க இயக்குனரகம் அனுப்பியுள்ள சம்மன் சட்டவிரோதமானது என்றும், நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்க போவதாகவும் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.