NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
    டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 01, 2024
    01:43 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 15-நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

    கெஜ்ரிவால் மீதான அமலாக்க இயக்குனரகத்தின் காவல் இன்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

    இது தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின் போது, ​​அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், மேலும் காவலில் வைக்க வேண்டும் என ED கேட்கவில்லை என்றும் கூறினார்.

    அதேநேரத்தில், லாக்-அப்பில் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததாகவும், அதிகாரிகளுக்கு நேரடியான பதில்களை வழங்காமல் இருந்ததாகவும் எஸ்.வி.ராஜு வாதிட்டார்.

    அதனால், மதுபான வழக்கில் டெல்லி முதல்வர் விசாரணையை தவறாக வழிநடத்துகிறார் என்றும் அவர் கூறினார்.

    எதிர்க்கட்சிகள் பேரணி

    எதிர்க்கட்சி தலைவர்கள் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு

    அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21ம் தேதி அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது. அவர், மார்ச் 28ம் தேதி வரை மத்திய அரசு காவலில் வைக்கப்பட்டார்.

    பின்னர், அவரது காவல் நான்கு நாட்கள் நீட்டிக்கப்பட்டு, இன்றுடன் முடிவடைந்தது.

    முன்னதாக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரில் எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்திய ப்ளாக் மெகா பேரணி நடத்தியது.

    ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சித் தலைவர்கள் ராகுல், பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் NCP (SCP) தலைவர் சரத் பவார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி
    முதல் அமைச்சர்
    நீதிமன்ற காவல்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    அரவிந்த் கெஜ்ரிவால்

    நவம்பர் 20-21 தேதிகளில் டெல்லியில் செயற்கை மழை: ஐஐடி திட்டம்  டெல்லி
    பேருந்துகளுக்கு தடை, செயற்கை மழை- காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசின் திட்டம் டெல்லி
    அமலாக்கத்துறையின் 3வது சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    'உங்களிடம் சரியான காரணம் இல்லை': அமலாக்க இயக்குநரகத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் டெல்லி

    டெல்லி

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ அனுப்பிய சம்மனை நிராகரித்தார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா இந்தியா
    இன்று நடைபெறுகிறது விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லி-நொய்டா எல்லையில் பெரிய நெரிசல் ஏற்பட வாய்ப்பு பஞ்சாப்
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8வது முறையாக சம்மன்  ஆம் ஆத்மி
    பாஜக எம்பி கவுதம் காம்பீர் தீவிர அரசியலில் இருந்து விலகல் பாஜக

    முதல் அமைச்சர்

    வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    "ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு திமுக
    அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தமிழக ஆளுநர் முதல்வருக்கு உத்தரவு  ஆர்.என்.ரவி
    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க இருக்கிறார் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி

    நீதிமன்ற காவல்

    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - ஜூலை 14ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு   கைது
    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு  கைது
    தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கும் அமலாக்கத்துறை  செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025