
மதுபானக் கொள்கை வழக்கு பிரச்சனையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனைத் தவிர்த்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜாமீனுக்காக ரூ.15,000 தனிப்பட்ட பத்திரத்தை அளிக்குமாறு அவரிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
பணமோசடி நடந்தததாக ஆம் ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. மணீஷ் சிசோடியா போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பணமோசடி வழக்கு விசாரணைக்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே 8 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
ஆனால், அவர் ஆஜராக மறுத்துவிட்டார். இதற்கிடையில், அவர் 8 சம்மன்களை புறக்கணித்ததை அடுத்து, அமலாக்க இயக்குனரகம் டெல்லி நீதிமன்றத்தில் அவர் மீது புகார் அளித்தது.
ட்விட்டர் அஞ்சல்
நீதிமன்றத்தில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால்
#JUSTIN டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் - கெஜ்ரிவாலுக்கு ஜாமின் #Delhi #ArvindKejriwal #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/433YyJTz4E
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 16, 2024
டெல்லி
அமலாக்க இயக்குநரகத்துடனான பிரச்சனை
EDயின் சம்மன்கள் சட்டவிரோதமானது என்று கூறிய கெஜ்ரிவால் அந்த சம்மன்களை புறக்கணித்தார்.
இந்த பிரச்சனையில் கெஜ்ரிவாலுக்கு விலக்கு அளித்த நீதிமன்றம், ED இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியதும், அவர் சனிக்கிழமையன்று EDக்கு முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதற்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், இதில் விலக்கு அளிக்க முடியாது என்றும், கெஜ்ரிவால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்பட்ட சம்மன்களை ஏற்காததற்காக அமலாக்க இயக்குநரகம் (ED) தாக்கல் செய்த புகார்களில் டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கியது.