NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நேஷனல் ஹெரால்டின் ரூ.752 கோடி சொத்துக்கள் மீது ஊழல் தடுப்பு அமைப்பு நடவடிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நேஷனல் ஹெரால்டின் ரூ.752 கோடி சொத்துக்கள் மீது ஊழல் தடுப்பு அமைப்பு நடவடிக்கை 

    நேஷனல் ஹெரால்டின் ரூ.752 கோடி சொத்துக்கள் மீது ஊழல் தடுப்பு அமைப்பு நடவடிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 11, 2024
    02:17 pm

    செய்தி முன்னோட்டம்

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் தீர்ப்பு வழங்கும் ஆணையம், விரிவான விசாரணைகளுக்குப் பிறகு, அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் (AJL) மற்றும் யங் இந்தியா(YI) சம்பந்தப்பட்ட உயர் பணமோசடி வழக்கு தொடர்பாக ரூ.751.9 கோடி சொத்துக்களை தற்காலிக இணைப்பு செய்ததை உறுதி செய்துள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியிடம் அமலாக்க இயக்குனரகம் முன்பு விசாரணை நடத்தியது. இரு காங்கிரஸ் தலைவர்களும் யங் இந்தியாவில் 76 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.

    பிஎம்எல்ஏ, 2002 இன் கீழ் நடந்த விசாரணையின் ஒரு பகுதியாக, ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை தற்காலிகமாக முடக்குவதற்கான உத்தரவை அமலாக்க இயக்குனரகம் (ED) கடந்த ஆண்டு தொடங்கியது.

    இந்தியா 

    பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் 

    இதற்கான விசாரணையில் AJL மற்றும் YI சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளின் சிக்கலான வலை கண்டுபிடிக்கப்பட்டது.

    அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) டெல்லி, மும்பை மற்றும் லக்னோ உட்பட நாட்டின் பல நகரங்களில் அசையா சொத்துகள் வடிவில் ரூ.661.69 கோடி குற்றத்தின் வருமானத்தை வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

    கூடுதலாக, யங் இந்தியா(YI), AJL-ல் ஈக்விட்டி பங்குகள் வடிவில் மொத்தம் ரூ.90.21 கோடி குற்றத்தின் வருமானத்தை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஜூன் 26, 2014 அன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு தனிப்பட்ட புகாரைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ED இன் விசாரணை தொடங்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    டெல்லி

    டெல்லியில், மத்திய அரசிற்கு எதிராக, பஞ்சாப் விவசாயிகள் இன்று மகாபஞ்சாயத்து நடத்த திட்டம் விவசாயிகள்
    கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவர் கே கவிதா டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார்  தெலுங்கானா
    மதுபானக் கொள்கை வழக்கு பிரச்சனையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம் ஆம் ஆத்மி
    பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவை மார்ச் 23 வரை காவலில் வைக்க அனுமதி  தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025