NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூரில் வெளிச்சத்திற்கு வந்த மற்றொரு கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூரில் வெளிச்சத்திற்கு வந்த மற்றொரு கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் 
    மணிப்பூரில் தனக்கு நேர்ந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளித்திருக்கும் பெண்

    மணிப்பூரில் வெளிச்சத்திற்கு வந்த மற்றொரு கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 10, 2023
    03:28 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் வன்முறையின் போது ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்த காணொளிப் பதிவு ஒன்று வெளியாகி, இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    நாட்டையே உலுக்கிய அந்த சம்பவம் வெளியான பிறகு, மணிப்பூர் வன்முறையின் போது பாதிக்கப்பட்ட பல்வேறு பெண்கள் தற்போது தங்களுக்கு நேர்ந்த அசம்பாவிதங்களை வெளிவந்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

    தற்போது, சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர், தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி, பிஷ்னுபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

    சுராசந்த்பூரில் இருந்து 35 கிமீ தொலைவில், பிஷ்னுபூரில் உள்ள மறுவாழ்வு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அவர் அளித்த புகாரின் மீது 'ஜீரோ FIR' பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    மணிப்பூர்

    மற்றொரு சூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்வு:

    போராட்டம் வெடித்த மே-3ம் தேதியன்று, போராட்டக்காரர்கள் தங்களுடைய வீட்டிற்கு, தங்களைச் சுற்றியிருக்கும் வீடுகளுக்கும் தீவைக்க தொடங்கியதையடுத்து, வீட்டை விட்டு வெளியேற, தங்கள் குடும்பத்தினருடன் தப்பித்து ஓடியிருக்கிறார் அவர்.

    அப்போது கீழே விழுந்த அவரைச் சூழ்ந்த போராட்டக்காரர்கள், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். மிகவும் பாதிக்கப்பட்ட உடல்நிலையில், மனநலமும் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கூடத் தோன்றியதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.

    முதலில் மருத்துவமனைக்கே செல்லத் தயங்கிய அவர், உடல்நிலை மிகவும் மோசமாகவே, இம்பாலில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சென்றிருக்கிறார். அங்கே அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவருக்கு நேர்ந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகாரளிக்கவும் உதவியதாகத் தெரிவித்துள்ளார்.

    தற்போது 376D, 354, 120B மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    இந்தியா

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக

    மணிப்பூர்

    மீண்டும் மணிப்பூரில் வன்முறை: சாலை மறியல், டயர்கள் எரிப்பு கலவரம்
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துவங்கியது அமைச்சரவை கூட்டம்  மு.க ஸ்டாலின்
    மணிப்பூர் விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக INDIA கூட்டணி கட்சிகள் போராட்டம்  பாஜக
    உளவுத்துறை எச்சரிக்கையின் எதிரொலி - சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்  சென்னை

    இந்தியா

    உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றார் ஜோதி யர்ராஜி தடகள போட்டி
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    ஆகஸ்ட் மாத அசத்தல் ஆஃபர்; கார்களுக்கு அதிகபட்ச தள்ளுபடியை அறிவித்தது ரெனால்ட் நிறுவனம் கார்
    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வில்வித்தை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025