NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திர பெண்ணுக்கு பார்சலில் மனித சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டல்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திர பெண்ணுக்கு பார்சலில் மனித சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டல்!
    மனித சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டல்

    ஆந்திர பெண்ணுக்கு பார்சலில் மனித சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டல்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 20, 2024
    06:21 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், ஏன்டாகண்டி கிராமத்தைச் சேர்ந்த சாகி துளசி என்ற பெண், தனது வீட்டிற்கு மின்சாதன பொருட்கள் வரும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், பார்சலில் மனித எச்சங்கள் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கூடுதலாக, சடலத்துடன் ரூ.1.3 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர் மர்ம நபர்கள்.

    சாகி துளசி, க்ஷத்ரிய சேவா சமிதியின் மூலமாக கட்டுமானத்தில் உள்ள தனது வீட்டிற்குப் பொருட்களுக்காகக் காத்திருந்தார்.

    அந்த அமைப்பிடம் நிதி உதவி கோரியபோது, ​​அவருக்கு முதலில் ஓடுகள் வழங்கப்பட்டன.

    அதேபோல இம்முறையும் துளசி, மின்விளக்கு, மின்விசிறி போன்ற மின்சாதனப் பொருட்களை கோரியிருந்தார்.

    இருப்பினும், அவரது வீட்டு வாசலில் வழங்கப்பட்ட பார்சலில் மனித உடற்பகுதி மற்றும் ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டி கடிதம் இருந்தது.

    விவரங்கள்

    பணம் தரவில்லை என்றால் பின்விளைவுகள் ஏற்படும் என மிரட்டல்

    சாகி துளசி, பார்சலை திறந்தபோது, அதில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் கிடந்ததை கண்டார்.

    அதனுடன் வந்த மிரட்டல் கடித்ததில் ரூ.1.3 கோடி பணம் தர வேண்டும் என்றும், இல்லை யென்றால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, சாகி துளசி மற்றும் அவரது குடும்பம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை தொடங்கியுள்ளனர்.

    முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் 4-5 நாட்களுக்கு முன் இறந்துவிடுவதாக தெரியவந்துள்ளது.

    தற்போது, போலீசார் அந்த மர்ம நபரை மற்றும் சத்ரியா சேவா சமிதி நிர்வாகத்தை விசாரித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா

    சமீபத்திய

    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்
    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு

    ஆந்திரா

    வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த ஜெகன் ரெட்டி கட்சி எம்எல்ஏ: தேர்தல் ஆணையம் கண்டனம்  தேர்தல்
    ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்பு  பாஜக
    ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தொடர் முன்னிலை சட்டமன்றம்
    ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெற்றி சட்டமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025