NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்
    இதே மத்திய சிறையில் தான் அவரது ஒன்பது கூட்டாளிகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 24, 2023
    02:19 pm

    செய்தி முன்னோட்டம்

    தப்பியோடிய காலிஸ்தான் ஆதரவாளரும் 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவருமான அம்ரித்பால் சிங்கைத் தேடும் வேட்டை ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு முடிவுக்கு வந்ததது.

    பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள பிந்தரன்வாலேவின் சொந்த கிராமமான ரோடில் வைத்து அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

    தீவிரவாதி ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே என்பவர் 1984இல் இந்திய அரசால் கொல்லப்பட்ட முதல் காலிஸ்தான் ஆதரவாளர் ஆவார். அவரது கிராமத்துக்கு வெளியே தற்போது அம்ரித்பால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    முதலில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்(NSA) கீழ் கைது செய்யப்பட்ட அவர், பதிண்டா விமான நிலையத்திலிருந்து அசாமில் உள்ள திப்ருகர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இதே மத்திய சிறையில் தான் அவரது ஒன்பது கூட்டாளிகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    details

    "அம்ரித்பால் கைது செய்யப்படவில்லை, அவர் சரணடைந்தார்"

    "பஞ்சாப் காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை ரோட் கிராமத்தில் கண்டுபிடித்தோம். அந்த கிராமத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அதன் பிறகு தப்பிக்க முடியாது என்பது அவருக்கே தெரிந்துவிட்டது. காலை 6.45 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்." என்று பஞ்சாப் காவல்துறை ஐஜி (தலைமையகம்) சுக்செயின் சிங் கில் கூறினார்.

    அம்ரித்பால், குருத்வாரா சாஹிப் என்ற சீக்கிய கோவிலுக்குள் இருந்தது போலீஸாருக்கு தெரிந்திருந்தும், அவர்கள் அந்த கோவிலின் புனிதத்தை காப்பதற்காக அதற்குள் நுழையவில்லை என்று கூறப்படுகிறது.

    ஆனால் பிந்திரன்வாலேவின் மருமகனும் முன்னாள் அகல் தக்த் தலைவருமான ஜஸ்பிர் சிங் ரோட், அம்ரித்பால் கைது செய்யப்படவில்லை, அவர் சரணடைந்தார் என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பஞ்சாப்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    அம்ரித்பால் சிங்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ரூ.6,000 கோடி.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!  மத்திய அரசு
    காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் உயிருடன் மீட்பு! நேபாளம்
    புதிய மைல்கல்லை எட்டிய ITC நிறுவனம்! பங்குச் சந்தை
    இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ  பாகிஸ்தான்

    பஞ்சாப்

    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை கனடா
    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திரௌபதி முர்மு

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி இந்தியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு இந்தியா

    அம்ரித்பால் சிங்

    பாகிஸ்தானுக்கும் அம்ரித்பாலுக்கும் தொடர்பு இருக்கிறதா: புதிய தகவல் பஞ்சாப்
    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் இந்தியா
    அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து இந்தியா
    நேபாளத்தில் ஒழிந்திருக்கிறாரா அம்ரித்பால் சிங்: உஷார் நிலையில் இருக்கும் நேபாள போலீஸ்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025