NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு
    அமித்ஷாவுக்கு தேசியக் கொடிகளை ஏந்திய பழங்குடியின பெண்கள் வரவேற்பளித்தனர்.

    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு

    எழுதியவர் Sindhuja SM
    May 30, 2023
    04:56 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மணிப்பூர் இனக்கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு இன்று(மே 30) அறிவித்துள்ளது.

    வன்முறையால் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூர் மாவட்டத்தை பார்வையிட சென்ற அமித்ஷாவுக்கு தேசியக் கொடிகளை ஏந்திய பழங்குடியின பெண்கள் வரவேற்பளித்தனர்.

    மணிப்பூரில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில் "மத்திய அரசால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்" என்ற சுவரொட்டிகள் அங்கு ஒட்டப்பட்டிருந்தன.

    அம்மாநில முதலமைச்சர் என்.பிரேன் சிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்களை உள்துறை அமைச்சர் இன்று இம்பாலில் சந்தித்தார்.

    details

    வதந்திகளை அகற்ற தொலைபேசி சேவைகள் அமைக்கப்படும்: மத்திய அரசு 

    "மணிப்பூரின் முக்கிய பிரமுகர்கள் அமைதிக்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர். மணிப்பூரில் இயல்புநிலையை மீட்டெடுக்க நாங்கள் ஒன்றாக பங்களிப்போம் என உறுதியளித்தனர்" என்று உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அமைதியை மீட்டெடுக்க, இம்பாலில் உள்ள தலைமைச் செயலகத்தில் விரிவான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.

    "வதந்திகளை அகற்ற" BSNL உதவியுடன் தொலைபேசி சேவைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    சில சிறிய சம்பவங்களைத் தவிர, 11 மலை மாவட்டங்களிலும் நேற்று பெரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.

    நேற்று முந்தைய தினம் நடந்த வன்முறையில் ஒரு போலீஸ்காரர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மணிப்பூர்
    கலவரம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி சாதாரண பாஸ்போர்ட்டை பெறலாம்: டெல்லி நீதிமன்றம்  ராகுல் காந்தி
    ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த இந்தியா.. முன்னேறும் இந்திய நிறுவனங்கள்! காலாண்டு
    ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆசிய கோப்பை

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025