
அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்திய அண்ணா பல்கலைகழகத்தின் மாபெரும் மோசடி
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த (affliation) தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடந்துள்ள குறிப்பிடத்தக்க முறைகேடுகளை, ஊழல் எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான (NGO) அறப்போர் இயக்கம் சமீபத்தில் வெளியிட்டது.
குறிப்பாக, ஏறக்குறைய 352 முழுநேர ஆசிரியர்கள் ஒரே நேரத்தில், 2 முதல் 11 கல்லூரிகளில், பணியமர்த்தப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கை கூறுகிறது.
இதனால், இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று முறைப்படி விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்தில் (DVAC), அந்த இயக்கத்தினர் புகாரளித்துள்ளனர்.
தரநிலைகள்
அங்கீகாரம் பெற தேவைப்படும் தரநிலைகள் மீறப்பட்டுள்ளதாக புகார்
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) ஆகியவற்றிலிருந்து இணைப்பு/அங்கீகாரம் பெற ஒவ்வொரு பொறியியல் கல்லூரியும் குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அளவுகோல்களில் உள்கட்டமைப்பு, ஆய்வக வசதிகள் மற்றும் போதுமான எண்ணிக்கையிலான தகுதி வாய்ந்த ஆசிரிய உறுப்பினர்கள் உள்ளனர்.
கல்லூரிகள் இந்த அளவுகோல்களுக்கு இணங்குவதாக அறிவித்தாலும், அங்கீகாரம் வழங்கப்படுவதற்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் நிறுவனங்களின் இணைப்பு மையம் மற்றும் AICTE ஆகியவற்றால் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் சரிபார்க்கப்படும்.
அதில்தான் குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறுகிறது அறப்போர் இயக்கம்.
RTI தகவல்
RTI மூலம் தகவல்கள் பெறப்பட்டு, சரிபார்ப்பு
அறப்போர் இயக்கம், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிறுவனங்களின் இணைப்பு மையத்தின் (சிஏஐ) தரவுகளையும், ஆய்வுகள் தொடர்பான RTI மூலம் பெறப்பட்ட தகவல்களையும் பயன்படுத்தியது.
இந்தத் தரவுகளின் பகுப்பாய்வில், 2023-24 கல்வியாண்டில், ஏறக்குறைய 353 நபர்கள் ஒரே நேரத்தில் 11 பொறியியல் கல்லூரிகளில் முழுநேர ஆசிரியர்களாகப் பணியாற்றியதை வெளிப்படுத்துகிறது.
இந்த ஆசிரிய உறுப்பினர்களின் புகைப்படங்கள், பிறந்த தேதிகள் மற்றும் கல்வித் தகுதிகள் ஆகியவை இந்த கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தின.
972 வெவ்வேறு கல்லூரிகளில் 353 நபர்களில், 175 நபர்கள் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இந்த முறைகேடு தொடக்க நிலை விரிவுரையாளர்களைத் தாண்டி பேராசிரியர்களையும் உள்ளடக்கியதாக உள்ளது என்பதைக் குறிக்கிறது.
இது கூட்டுச் சதியின் அளவையும் அதன் ஆழமான தாக்கங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்கிறது அறப்போர் இயக்கம்.