NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன?
    வங்கிகள் 30,31 ஜனவரி மூடப்படுமா?

    நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன?

    எழுதியவர் Siranjeevi
    Jan 28, 2023
    03:36 pm

    செய்தி முன்னோட்டம்

    தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30, 31ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என 10 லட்சம் பேர் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.

    ஐந்து நாள் வங்கி சேவை, ஓய்வூதியத்தை மேம்படுத்துதல் மற்றும் அனைத்து கேடர்களிலும் ஆட்களை வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன.

    இதனால், இன்று முதல் 4 நாட்கள் விடுமுறையால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும். அதே நேரத்தில் ஏடிஎம் சேவையும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே, வங்கி ஊழியர்கள் தொடர்பான கோரிக்கையில், துணை தலைமை தொழிலாளர் ஆணையர் தேஜ்பகதுர் முன்னிலையில் கடந்த 24-ந்தேதி சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    வங்கிகள் வேலைநிறுத்தம்

    வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்ததிற்கு காரணம் என்ன?

    இந்நிலையில், அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிஎச்.வெங்கடாசலம் தெரிவிக்கையில், கடந்த 27-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில், 9 வங்கி ஊழியர்கள் சங்கங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

    அவர்களின் கருத்துகளில் வேறுபாடு இருந்தபோதிலும், நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலைநிறுத்தத்தை தள்ளிவைக்க ஒப்புக்கொண்டனர்.

    மேலும், கூட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனால் வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்படுகிறது.

    எனவே, 31-ந்தேதி, ஐக்கிய வங்கி சங்கங்கள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும்.

    அப்போது, வாரத்தில் 5 நாள் வேலை, ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல் ஆகிய 3 முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

    ஒருவேளை கருத்தொற்றுமை உருவாகாவிட்டால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தேதி நிர்ணயிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வங்கிக் கணக்கு
    தொழில்முனைவோர்

    சமீபத்திய

    கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று  கோவிட் 19
    அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD காற்றழுத்த தாழ்வு நிலை
    சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல் சிவகார்த்திகேயன்
    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி

    இந்தியா

    அந்தமானில் இருக்கும் 21 தீவுகளுக்கு பெயர் சூட்டினார் பிரதமர் மோடி மோடி
    வழக்கறிஞர்கள் இல்லாததால் 63 லட்ச வழக்குகள் தேக்கம்-'நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்' தகவல் இந்தியா
    கூகுளின் முன்னாள் உயர் அதிகாரியின் வைரல் ட்வீட்: நெகிழ்ச்சியில் இணையவாசிகள் ட்விட்டர்
    வைரல் வீடியோ: எச்சில் துப்புவதற்கு விமான ஜன்னலை திறக்க சொன்ன பயணி வைரல் செய்தி

    வங்கிக் கணக்கு

    30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள் சேமிப்பு டிப்ஸ்
    சரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,100ஐ தாண்டியது சென்னை
    ஜனவரி 1 முதல் புதிதாக அமல்படுத்தப்படும் சில விதிகள்; விவரங்கள் உள்ளே கார்
    இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி இந்தியா

    தொழில்முனைவோர்

    தென்காசி மாவட்டத்தில் பெண்களால் நடத்தப்பட்ட 'வாவ் வொண்டர் ஆஃப் வுமன்' கிறிஸ்துமஸ் மார்க்கெட் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025