NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் கொலை வழக்கு - கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் கொலை வழக்கு - கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து 
    ரயில்முன் இளம்பெண்ணை தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கு - கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து

    ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் கொலை வழக்கு - கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து 

    எழுதியவர் Nivetha P
    Jul 10, 2023
    03:16 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை பரங்கிமலை பகுதியில் வசித்துவந்த கல்லூரி மாணவி சத்யப்ரியா, அதேப்பகுதியிலுள்ள சதீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

    இதற்கு பெண்வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், சத்யப்ரியா சதீஷிடம் பேசுவதை நிறுத்தியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்தாண்டு அக்டோபர் 13ம்தேதி கல்லூரிச்செல்ல பரங்கிமலை ரயில்நிலையம் வந்த சத்யப்ரியாவை ரயில்முன் தள்ளிவிட்டு கொலை செய்தார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, சதீஷை மறுநாளே கைது செய்தனர்.

    பின்னர், இவ்வழக்கின் விசாரணை சிபிசிஐடி'க்கு மாற்றப்பட்டது.

    இவர்களின் பரிந்துரைப்படி சதீஷ் மீது குண்டர் சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்ய கடந்த நவம்பர் 4ம்தேதி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குண்டர் சட்டத்தினை ரத்துச்செய்ய கோரி சதீஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் என்று கூறப்படுகிறது.

    குண்டர் சட்டம் 

    சென்னை காவல் ஆணையரின் இயந்திரத்தனமான உத்தரவினை ரத்து செய்யவேண்டும் என கோரல் 

    அந்த மனுவில், அடிப்படை உரிமையினைமீறி, அவசரநிலையில் தன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், குண்டர் சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகல் முறையாக இல்லை. அதனால், அதை ரத்துச்செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தப்பொழுது, ஒரு கொடூரமான செயலை செய்துள்ள சதீஷுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கக்கூடாது என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

    இதனைத்தொடர்ந்து இவ்வழக்கின் அடுத்த விசாரணையில், குண்டர் சட்டத்தின் கீழான கைது உத்தரவில் செப்டம்பர் 27 என தமிழிலும், அக்டோபர் 13 என ஆங்கிலத்திலும் முரணாகவுள்ளது என்று சதீஷ் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

    இதற்கு தகுந்த விளக்கத்தினை காவல்துறை அளிக்காத காரணத்தினால், சதீஷ் மீதான குண்டர்சட்டத்தினை ரத்து செய்வதாகக்கூறி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    காவல்துறை
    கைது
    சென்னை

    சமீபத்திய

    அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு அமெரிக்கா
    நார்வே செஸ் 2025: கிளாசிக்கல் செஸ் போட்டியில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் டி.குகேஷ் டி.குகேஷ்
    இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக காலமானார்; தமிழ் திரையுலகம் அதிர்ச்சி இயக்குனர்
    ஐபிஎல் 2025 ஆர்சிபிvsபிபிகேஎஸ்: இறுதிப்போட்டி மழையால் ரத்தானால் கோப்பை யாருக்கு? ஐபிஎல் 2025

    காவல்துறை

    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம்  சென்னை
    தமிழகத்தில் ராணுவ வீரர் மனைவி அரை நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது  ஜம்மு காஷ்மீர்
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா

    காவல்துறை

    தேசிய கூடைப்பந்து லீக்கில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோனார் மெக்ரிகோர் அமெரிக்கா
    பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை தமிழ்நாடு
    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்  தமிழ்நாடு
    ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்  பஞ்சாப்

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  செந்தில் பாலாஜி
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    சென்னை

    ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100யை தாண்டியது - பொதுமக்கள் அதிர்ச்சி  கோடை காலம்
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாட்களுக்கு சிகிச்சை - காவேரி மருத்துவமனை  செந்தில் பாலாஜி
    தமிழ்நாடு, புதுச்சேரி மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்  கடற்கரை
    பல மகத்தான சாதனைகளை கல்வித்துறையில் செய்து வருகிறோம் - தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025