NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் அதிர்வு; என்ன நடந்தது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் அதிர்வு; என்ன நடந்தது?
    சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் அதிர்வு

    சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் அதிர்வு; என்ன நடந்தது?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 24, 2024
    12:47 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை திடீரென அதிர்வு உணரப்பட்டுள்ளது.

    இதனால் ஊழியர்கள் பதற்றத்துடன் வெளியேறினர்.

    தலைமைச் செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இன்று காலை அங்கே பணியாற்றும் ஊழியர்கள் திடீரென அதிர்வினை உணர்ந்தனர். மேலும் முதல் தளத்தில் உள்ள தரையில் சத்தத்துடன் விரிசல் ஏற்பட்டது.

    இதனால், பயந்த ஊழியர்கள் மாளிகையிலிருந்து அடித்துபிடித்து வெளியேறினர். இதனால் அங்கே பதற்ற நிலை ஏற்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் விரிசல்#Chennai | #KavingarMaligai | #Crack | #BuildingIssue | #loudpolitics pic.twitter.com/f2Ljur1eDe

    — LoudPolitics (@loudpolitics_lp) October 24, 2024

    பதில்

    உடனடியாக ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் EV வேலு

    விரிசல் சம்பவம் நிகழ்ந்ததும் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ வேலு அந்த இடத்தினை நேரில் வந்து ஆய்வு செய்தார்.

    இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர், இது சாதாரண விரிசல்தான் என்றும், ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தனர்.

    பின்னர் சம்பவம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: "14 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட டைல்ஸ், அப்போது சிறிய வடிவங்களில் தயாரிக்கப்பட்டன. இது சாதாரண ஏர் கிராக். கட்டிடத்தில் விரிசல் இல்லை. பொறியாளர்களுடன் ஆய்வு செய்ததில், கட்டிடம் உறுதியாக உள்ளது. எனினும், ஏர் கிராக் உள்ள இடங்களில் பழைய டைல்ஸ்களை அகற்றி புதியவை போட ஆணையிட்டுள்ளேன். எனவே, அச்சப்பட வேண்டாம்," என்றார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | “நாமக்கல் கவிஞர் மாளிகை உறுதியாக உள்ளது” -ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் எ.வ.வேலு பேட்டி#SunNews | #EVVelu | #Secratariate | #Chennai pic.twitter.com/gZS6kAIA9d

    — Sun News (@sunnewstamil) October 24, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    காந்தி ஜெயந்தி : இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம் மெட்ரோ
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    சென்னையில் உலக சினிமா விழா 2024: தேதி, நேரம் உள்ளிட்ட விவகாரங்கள் சினிமா
    இன்னும் 3 ஆண்டுகளில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் மெட்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025