NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு 308 வயது
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு 308 வயது
    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு 308 வயது

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு 308 வயது

    எழுதியவர் Nivetha P
    Aug 03, 2023
    12:29 pm

    செய்தி முன்னோட்டம்

    திருப்பதி ஏழுமலையான் கோயில் என்றாலே நமது நினைவிற்கு வருவது அங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தான்.

    இந்த லட்டுவை 'ஸ்ரீவாரி லட்டு' என்று அழைக்கப்படும் நிலையில், இந்த பிரசாதத்தில் இறைவனின் பரிபூரண அருள் இருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

    இந்த லட்டினை செய்வதற்காகவே 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கோயில் தேவஸ்தானத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    முந்தைய காலங்களில் கைகளால் பிடிக்கப்பட்ட லட்டு தற்போது மெஷின் கொண்டு தயார் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    300 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு பூந்தியினை பிரசாதமாக வழங்கியுள்ளனர்.

    அதன் பின், 1715ம் ஆண்டு ஆகஸ்ட்.,2ம் தேதி முதல் தான் பூந்திக்கு பதில் லட்டுவினை பிரசாதமாக கொடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    திருப்பதி 

    திருப்பதியில் 3 வகையான லட்டுகள் தயாரிப்பு 

    இதனிடையே கடந்த 2015ம் ஆண்டு திருப்பதி லட்டுவுக்கு புவிசார் காப்புரிமை வழங்கப்பட்ட நிலையில், இந்தியாவில் யாரும் திருப்பதி லட்டு என்னும் பெயரில் லட்டுவினை தயார் செய்யக்கூடாது என்று கூறப்பட்டது.

    இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றோடு(ஆகஸ்ட்.,2) இந்த லட்டு விநியோகமானது துவங்கி 307 ஆண்டுகள் நிறைவுற்று 308ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

    திருப்பதியில் 3 வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகிறார்களாம்.

    அதன்படி, 1750 கிராம் எடை கொண்ட ஆஸ்தான லட்டு முதன்மையான திருவிழா நாட்களில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

    இன்னொன்று 175 கிராம் எடையில் கவுண்டர்களில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக செய்யப்படும் லட்டு.

    3வது லட்டு சாமிக்கு நெய்வேத்யம் செய்வதற்காக தயாரிக்கப்படும் ப்ரோக்தம் லட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    திருவிழா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா

    திருவிழா

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025