NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
    மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

    மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

    எழுதியவர் Nivetha P
    Sep 24, 2023
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் ஒவ்வொரு முறையும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லுகையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுகிறார்கள் அல்லது விரட்டியடிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    இதனால் அவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் 400 விசைப்படகுகள் மீன்வளத்துறையினரிடம் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி பெற்றுள்ளது.

    அதன்படி 100 விசைப்படகுகள் நேற்று(செப்.,23) காலை மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

    அப்போது, 7 இலங்கை கடற்படை கப்பல்கள் கச்சத்தீவு பகுதியில் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து தெரியவந்த நிலையில், 300 படகுகளுக்கு பதில் வெறும் 50 படகுகள் மட்டும் கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    மீன்

    இந்த விவகாரம் குறித்து மீனவர் ஒருவர் வேதனை 

    இதனுள் ஓர் பிரிவினர் இந்திய எல்லைப்பகுதியினை ஒட்டிய கச்சத்தீவு பகுதியில் வலை விரித்து மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிகிறது.

    இதனையடுத்து, அவர்கள் ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கி விரட்டியதும் இல்லாமல், படகுகளில் இறங்கி அவர்களது வலைகளை வெட்டி சேதப்படுத்தினர் என்று கூறப்படுகிறது.

    மேலும் அவர்கள், தொடர்ந்து இப்பகுதியில் மீன்பிடித்தால் சிறைபிடிப்போம் என்று மிரட்டியதால் அச்சமுற்ற மீனவர்கள் மீன் பிடிக்காமல் உடனே கரைக்கு வந்தடைந்துள்ளனர்.

    இந்த விவகாரம் குறித்து மீனவர் ஒருவர், "ஒவ்வொரு முறையும் ரூ.25ல் இருந்து 50 ஆயிரம் வரை செலவு செய்து தான் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறோம். ஆனால் இலங்கை கடற்படை இவ்வாறு மீன்பிடிக்க விடாமல் விரட்டியடிப்பதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    கடற்படை
    ராமேஸ்வரம்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    இலங்கை

    தமிழகத்தில் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தமிழ்நாடு
    வரலாறும், கலாச்சாரமும் கைகோர்க்கும் அழகிய யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் சுற்றுலா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் கடற்படை
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை பாஜக அண்ணாமலை

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை
    இந்தியப் பெருங்கடலில் ரூ.25,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் இந்தியா

    ராமேஸ்வரம்

    கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு யாழ்ப்பாணம்
    கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம் இந்தியா
    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025