NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாதிக்கப்பட்ட டெல்லி விமான நிலைய முனையம் ஒரு மாதத்தில் மூடப்படுவதாக இருந்தது: அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாதிக்கப்பட்ட டெல்லி விமான நிலைய முனையம் ஒரு மாதத்தில் மூடப்படுவதாக இருந்தது: அறிக்கை
    இந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது

    பாதிக்கப்பட்ட டெல்லி விமான நிலைய முனையம் ஒரு மாதத்தில் மூடப்படுவதாக இருந்தது: அறிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 28, 2024
    03:38 pm

    செய்தி முன்னோட்டம்

    கனமழை காரணமாக டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-1-ன் ஒரு பகுதியின் மேல்கூரை வெள்ளிக்கிழமை காலை இடிந்து விழுந்தது.

    இந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இது பற்றி வெளியான ஒரு அறிக்கையில், இந்த முனையம் ஏற்கனவே ஒரு மாதத்தில் மூடப்படுவதாக இருந்ததாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தி டெலிகிராப் ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

    "டெர்மினல்-1 விரிவாக்கம் கடைசி கட்டத்திலுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில், பழைய கட்டமைப்பு மூடப்படும். தற்போது இடிந்து விழுந்தது 15 ஆண்டுகள் பழமையான கட்டமைப்பு, பழைய புறப்பாடு முனையத்தின் ஒரு பகுதியாகும்," என்று அதிகாரி கூறினார்.

    இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

    காரணம்

    கூரை 2008-09 இல் கட்டப்பட்டது

    டெல்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (DIAL), GMR குழுமம் தலைமையிலான ஒரு கூட்டமைப்பு, தேசிய தலைநகரில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை இயக்குகிறது.

    இந்த விமான நிலையம் முன்பு இந்திய விமானப்படையால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

    பின்னர், அது இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    மே 2006 இல் விமான நிலையத்தின் நிர்வாகத்தை DIAL ஏற்றுக்கொண்டது.

    டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல்-1ல் இடிந்து விழுந்த மேற்கூரை 2008-09 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    அரசியல் பதில்

    உள்கட்டமைப்பு தொடர்பான பேரழிவுகளுக்கு அரசாங்கம் விமர்சிக்கப்படுகிறது

    செய்தியாளர்களிடம் பேசிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபுவும், இந்த கட்டிடம் 2009ம் ஆண்டு கட்டப்பட்டது என உறுதிப்படுத்தினார்.

    "பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த கட்டிடம் மறுபக்கம் என்பதையும், இங்கு இடிந்து விழுந்த கட்டிடம் பழைய கட்டிடம் என்பதையும், 2009ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கட்டிடம் என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" எனக்கூறினார்.

    இந்த விபத்து குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மோடி அரசைக் கடுமையாகத் தாக்கியதைத் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

     நடவடிக்கைகள்

    சரிவைத் தொடர்ந்து விசாரணை மற்றும் இழப்பீடு அறிவிக்கப்பட்டது

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார்.

    இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ₹20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹3 லட்சமும் வழங்கப்படும். விசாரணைக்கு கூடுதலாக, இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இதே போன்ற கட்டமைப்புகளை ஆய்வு செய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

    சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் இந்த செயல்முறையை மேற்பார்வையிடும்.

    இருப்பினும், இந்த ஆய்வுக்கான காலக்கெடு அல்லது விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    விமான நிலையம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    டெல்லி

    டெல்லியில் 47.4 டிகிரி வெப்பம், கேரளாவுக்கு ரெட் அலெர்ட்: இன்றைய வானிலை நிலவரம்  இந்தியா
    மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம்  உயர்நீதிமன்றம்
    ஆப்பிள் விஷன் ப்ரோவைப் பயன்படுத்தி செய்த டெல்லி மருத்துவர் ஆப்பிள்
    மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு ஆம் ஆத்மி

    விமான நிலையம்

    டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம்  டெல்லி
    புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் மூடல் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025