NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் பத்திரங்களை திரும்பப் பெறுகிறது அதானி துறைமுகம்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் பத்திரங்களை திரும்பப் பெறுகிறது அதானி துறைமுகம்! 
    புதிய திட்டங்களுடன் அதானி குழுமம்

    130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் பத்திரங்களை திரும்பப் பெறுகிறது அதானி துறைமுகம்! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 24, 2023
    02:17 pm

    செய்தி முன்னோட்டம்

    அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமான அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலமானது குறிப்பிட்ட கடன் பத்திரங்களைத் திரும்பப் பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

    2024-ல் செலுத்தவேண்டிய கடனில் சிறிதளவை திருப்பிச் செலுத்தும் திட்டத்தில் ஒரு பகுதியாக இதனை அறிவித்திருக்கிறது.

    கடந்த ஜனவரி மாதம் அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அந்நிறுவனப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.

    இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு தங்கள் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க, தங்களுடைய கடன்களை முன்கூட்டியே செலுத்தவிருப்பதாக கடந்த மாதம் அறிவித்தது அதானி குழுமம்.

    அதற்கான முயற்சிகளை தற்போது முன்னெடுத்து வருகிறது அக்கழுமம்.

    இந்தியா

    அதானி குழுமத்தின் திட்டம் என்ன?

    அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி ஆகிய இரு நிறுவனங்களிடமும் இரண்டு பில்லியன் டாலர்கள் மதிப்புடைய வெளிநாட்டு நாணய பத்திரங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பத்திரங்களில் 130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய பத்திரங்களை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    இதனைக் கொண்டு குறிப்பிட்ட கடன்களை திருப்பிச் செலுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. நடப்பு காலாண்டில் 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான கடன்களை திருப்பிச் செலுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

    இதே போல் இனி வரும் காலாண்டுகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக கடனைத் திருப்பிச் செலுத்தும் முடிவில் இருக்கிறது அதானி குழுமம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பங்குச்சந்தை செய்திகள்
    வணிக செய்தி

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இந்தியா

    மோடியிடம் கோரிக்கை வைத்த சிறுமி - பள்ளியை சீரமைக்கும் அதிகாரிகள்  ஜம்மு காஷ்மீர்
    காலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் மனைவி கைது செய்யப்பட்டார்  பஞ்சாப்
    குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ரூ.6,000 கோடி.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!  மத்திய அரசு
    காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் உயிருடன் மீட்பு! நேபாளம்

    பங்குச்சந்தை செய்திகள்

    பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அவலான் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகள்.. முதலீட்டாளர்களுக்கு லாபமா? நஷ்டமா?  பங்குச் சந்தை
    நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கும் HCL  பங்குச் சந்தை
    நான்காம் காலாண்டில் குறைந்த லாபம்.. சரிவைச் சந்தித்த ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகள்!  பங்குச் சந்தை

    வணிக செய்தி

    பிஎஸ்என்எல்-இன் அற்புதமான ரூ. 87 திட்டம் - இவ்வளவு சலுகைகளா? பிஎஸ்என்எல்
    இன்றைய நாளின் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! தங்கம் வெள்ளி விலை
    பிஸ்லேரி இன்டர்நேஷனலின் புதிய தலைவர்: யாரிந்த ஜெயந்தி சவுகான் இந்தியா
    நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை - இன்றைய விபரம் தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025