NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆவின் நிறுவன பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் 50%மாக குறைப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆவின் நிறுவன பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் 50%மாக குறைப்பு 
    ஆவின் நிறுவன பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் 50%மாக குறைப்பு

    ஆவின் நிறுவன பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் 50%மாக குறைப்பு 

    எழுதியவர் Nivetha P
    Oct 04, 2023
    11:40 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமான ஆவின் விற்பனை செய்து வருகிறது.

    இந்நிறுவனம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பாலினை கொள்முதல் செய்வதாகவும், சென்னையில் மட்டும் 15 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

    கொழுப்புசத்தின் அடிப்படையில் இந்நிறுவனம் பாலை ஆரஞ்சு, பச்சை, நீலம் உள்ளிட்ட நிறங்களில் விற்பனை செய்து வரும் நிலையில் 4.5% கொழுப்புசத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பாலின் விநியோகத்தினை 50% குறைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதனிடையே, ஆளும்கட்சி திமுக அளித்த வாக்குறுதிப்படி பச்சை நிறப்பால் பாக்கெட்டின் விலை ரூ.3 குறைக்கப்பட்டு அரைலிட்டர் பால் ரூ.22க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆவின் 

    விநியோகம் குறைக்கப்படவில்லை - ஆவின் நிர்வாகம் மறுப்பு 

    இதனால் லிட்டருக்கு ரூ.7ஆவின் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுவதால் தான் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    மேலும், அதனை ஈடுசெய்யவே ஊதா நிறத்தில் 3.5%கொழுப்புசத்து கொண்ட சமன்படுத்தப்பட்ட பாலினை ஆவின் அறிமுகம் செய்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து, விரைவில் பச்சைநிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் 70%மாக குறைக்கப்படப்போவதாக கூறப்படுவதால் பொதுமக்களும், பால் முகவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து சென்னை பால் முகவர்கள் கூறுகையில், பச்சைநிற பால் பாக்கெட்டினை விட ஊதா நிறப்பாலின் கொழுப்புசத்து குறைவு என்பதால் மக்கள் தனியார் நிறுவன பாலினை வாங்கி செல்வதாக கூறியுள்ளனர்.

    இந்நிலையில், ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குனரான வினீத் இதுகுறித்து கூறுகையில், அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளையும் மக்களுக்கு தடையின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    எவ்வகை பாலின் விநியோகமும் குறைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆவின்
    தமிழ்நாடு
    பால்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஆவின்

    போலி மாதாந்திர பால் அட்டைகளை அகற்ற நடவடிக்கை - ஆவின் நிறுவனம் சென்னை
    இன்று முதல் ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு தமிழ்நாடு

    தமிழ்நாடு

    துருக்கியில் சிகிச்சைப்பெறும் குழந்தை-சென்னைக்கு அழைத்துவர முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி மு.க ஸ்டாலின்
    டெங்கு பரவல் - தகவல் அளிக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிப்பு டெங்கு காய்ச்சல்
    15 தமிழக மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை  புதுச்சேரி
    சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணம் மாற்றியமைப்பு - முதல்வர் மு.க ஸ்டாலின்

    பால்

    இனி திருப்பதி லட்டு தயாரிக்க இந்த பொருள் சேர்க்கப்படாது என அறிவிப்பு திருப்பதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025