NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆருத்ரா வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆருத்ரா வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் 
    ஆருத்ரா வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    ஆருத்ரா வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் 

    எழுதியவர் Nivetha P
    Jun 27, 2023
    12:12 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

    இந்நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்ற விளம்பரம் செய்யப்பட்டது.

    அதனை நம்பி கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 9,255 வாடிக்கையாளர்கள் பணத்தினை கொண்டுவந்து முதலீடு செய்துள்ளனர்.

    இதன்மூலம், இந்நிறுவனம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்தது என்று புகார்கள் எழுந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டு வந்த ஹரிஸ், மாலதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் ஹரிஸ் கொடுத்த வாக்குமூலத்தின்படி, பாஜக கட்சியில் பொறுப்பினைப்பெற வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணத்தினை பயன்படுத்தியதாக கூறப்பட்டது.

    குற்றப்பத்திரிக்கை 

    500 முகவர்களுக்கு சமமன் அனுப்ப குற்றப்பிரிவு போலீசார் முடிவு

    இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், சினிமா நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு இதில் தொடர்பு உள்ளது என்று கூறப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி பணத்தினை வாங்கியுள்ளார் என்று குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    இதனை தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் 500 முகவர்களுக்கு சமமன் அனுப்ப குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த 500 முகவர்கள் மூலம் இந்த மோசடியில் ரூ.800 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் தயாரித்துள்ள குற்றப்பத்திரிக்கை தொடர்பான ஆவணங்கள் இன்று(ஜூன்.,27)நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    சென்னை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாஜக

    கர்நாடக தேர்தல் 2023: வாக்கு எண்ணிக்கை பாதி முடிந்துவிட்டது, முன்னிலையில் இருப்பது யார்? கர்நாடகா தேர்தல்
    கர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக  இந்தியா
    கர்நாடக தேர்தல்; ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது: ராகுல் காந்தி  இந்தியா
    முடிவடைந்தது வாக்கு எண்ணிக்கை: கர்நாடகாவில் காங்கிரஸுக்கு தனி பெரும் வெற்றி  இந்தியா

    சென்னை

    தாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் வாரம் 3 முறை இயக்கப்படும்  திருநெல்வேலி
    விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மீண்டும் தனது சேவையை துவங்கியது  ரயில்கள்
    ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னை-போடி ரயில் சேவை துவக்கம்  ரயில்கள்
    நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு? விமானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025