NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆருத்ரா வழக்கில் 3000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தயார் - குற்றப்பிரிவு போலீசார் தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆருத்ரா வழக்கில் 3000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தயார் - குற்றப்பிரிவு போலீசார் தகவல் 
    ஆருத்ரா வழக்கில் 3000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தயார் - குற்றப்பிரிவு போலீசார்

    ஆருத்ரா வழக்கில் 3000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தயார் - குற்றப்பிரிவு போலீசார் தகவல் 

    எழுதியவர் Nivetha P
    Jun 20, 2023
    05:32 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம், சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டுவந்தது.

    இந்நிறுவனத்தில் ரூ.1.லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்ற மோசடி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    அதனை நம்பிய கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 9,255 வாடிக்கையாளரிடம் இந்நிறுவனம் ரூ.2,438கோடி பெற்று மோசடி செய்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவுச்செய்த பொருளாதார குற்றப்பிரிவுப்போலீசார் இந்நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டுவந்த ஹரிஸ் மற்றும் மாலதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஹரிஸ் கொடுத்த வாக்குமூலத்தின்படி, பாஜக'வில் பொறுப்பினைப்பெற வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணத்தினை பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.

    இதுப்பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், சினிமா நடிகரும்-பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கும் இதில் தொடர்புள்ளது என்று தெரியவந்தது.

    விசாரணை 

    இவ்வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் 

    இதனை தொடர்ந்து இந்த நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட 61 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    அதே போல் 22 கார்கள், வங்கிக்கணக்கில் உள்ள ரூ.96 கோடி டெபாசிட் பணம், ரூ.103 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஆகியன முடக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

    இதுவரை இந்த வழக்கில் 21 பேரினை கைது செய்துள்ள குற்றப்பிரிவு போலீசார், விசாரணையினை முடித்து 3000 பக்க அளவிலான குற்றப்பத்திரிகையினை தயார் செய்துள்ளது.

    இந்த வழக்கு குறித்து விசாரணை நடக்கும் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இந்த 3000 பக்க குற்றப்பத்திரிகையினை போலீசார் தாக்கல் செய்யவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சென்னை

    அகஸ்தியா தியேட்டரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியதாக கூறப்பட்டது உண்மையா?  திரையரங்குகள்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு
    சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம் மு.க ஸ்டாலின்
    சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம்  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையினை நேரில் கேட்டறிந்தார் தமிழக முதல்வர் - அமைச்சரின் மனைவி கொடுத்த மனு ஏற்பு  மு.க ஸ்டாலின்
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025