NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆம் ஆத்மிக்கு விழுந்த அடுத்த அடி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் எம்பி சஞ்சய் சிங்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆம் ஆத்மிக்கு விழுந்த அடுத்த அடி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் எம்பி சஞ்சய் சிங்
    ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஒரு பெரும் தலைவர் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

    ஆம் ஆத்மிக்கு விழுந்த அடுத்த அடி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் எம்பி சஞ்சய் சிங்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 04, 2023
    06:09 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி மதுபானக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங்கை அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது.

    சஞ்சய் சிங்கின் வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    இது குறித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 2024-பொது தேர்தலில் வெற்றிபெற மத்திய பாஜக அரசு எந்த எல்லைக்கும் போகும் என்று தெரிவித்துள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஒரு பெரும் தலைவர் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

    டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஒரு பணமோசடி குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.

    சகஜச

    ஆம் ஆத்மி கட்சி விழுந்த அடுத்த அடி

    அதன் பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரியில் தான் அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது.

    பிப்ரவரி மாதம், அப்போதைய டெல்லி துணை முதல்வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய உதவியாளருமான மணீஷ் சிசோடியா, மதுபானக் கொள்கை ஊழலில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், தற்போது அக்காட்சியை சேர்ந்த இன்னொரு பெரும் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    டெல்லி மதுபானக் கொள்கை சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் சிங்கிடம் மத்திய புலனாய்வு அமைப்பினர் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் தினேஷ் அரோரா, சஞ்சய் சிங்க்கு எதிராக 'அப்ருவராக' மாறியதால், சஞ்சய் சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஆம் ஆத்மி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெல்லி

    77வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி  பிரதமர்
    'நம் மகள்களுக்கு எந்த கொடுமையும் நடக்கக்கூடாது': பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை  பிரதமர் மோடி
    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி பிரதமர்
    மீண்டும் அபாய கட்டத்தினை அடைந்த யமுனை நதி நீர்மட்டம்  கனமழை

    ஆம் ஆத்மி

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் டெல்லி
    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன டெல்லி

    அரவிந்த் கெஜ்ரிவால்

    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு டெல்லி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்  இந்தியா
    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது இந்தியா

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025