NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சந்திராயன்-3' திட்டத்தில் மூளையாக செயல்பட்ட தமிழர் - விஞ்ஞானி வீரமுத்துவேல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சந்திராயன்-3' திட்டத்தில் மூளையாக செயல்பட்ட தமிழர் - விஞ்ஞானி வீரமுத்துவேல்
    'சந்திராயன்-3' திட்டத்தில் மூளையாக செயல்பட்ட தமிழர் - விஞ்ஞானி வீரமுத்துவேல்

    'சந்திராயன்-3' திட்டத்தில் மூளையாக செயல்பட்ட தமிழர் - விஞ்ஞானி வீரமுத்துவேல்

    எழுதியவர் Nivetha P
    Aug 23, 2023
    05:21 pm

    செய்தி முன்னோட்டம்

    நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலகநாடுகள் முயற்சித்து வரும் நிலையில், இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் இந்த'சந்திராயன்'திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    இதன் ஓர் முக்கிய நிகழ்வாக இன்று(ஆகஸ்ட்.,23)மாலை நிலவின் தென்துருவத்தில் 'சந்திரயான் 3' தரையிறங்கவுள்ளது.

    இத்திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர் தான் 'சந்திராயன்-3' இயக்குனரான வீரமுத்துவேல். இவர் தமிழ்நாடு மாவட்டம் விழுப்புரத்தினை சேர்ந்தவராவார்.

    ரயில்வே ஊழியர் பழனிவேல் என்பவரது மகனான வீரமுத்துவேல் கடந்த 1978ம்ஆண்டு பிறந்துள்ளார்.

    தனது பள்ளி படிப்பினை விழுப்புரம் ரயில்வே பள்ளியில் முடித்த இவர், பாலிடெக்னிக்கில் பொறியியல் துறையில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.

    பின்னர் திருச்சி REC-கல்லூரியில் முதுகலை பட்டம் படித்த இவர், 2004ம்ஆண்டு முதல் இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது.

    இவர் 'சந்திராயன்-2'திட்டத்திலும் முக்கிய பங்கினை வகித்துள்ளார்.

    விண்கலம் 

    2019ம் ஆண்டில் 'சந்திராயன்-3' திட்ட இயக்குனரானார் வீரமுத்துவேல் 

    தொடர்ந்து, 2016ம் ஆண்டு விண்கலத்தின் மின்னணு பொதியில் ஏற்படும் அதிர்வுகளை கட்டுக்குள் கொண்டுவருவது எவ்வாறு என்பது குறித்த ஆய்வு கட்டுரை ஒன்றினை வழங்கினார்.

    அந்த கட்டுரை மீதான ஆய்வு பெங்களூர் யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மையத்தில் வைத்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

    அந்த சோதனையின் முடிவில், இவரது இந்த தொழில்நுட்பம் ரோவரை இயக்கவும், லேண்டரை நிலவில் சரியாக தரையிறக்கவும் பெரிதும் உதவும் என்பது தெரியவந்தது.

    அதன் பின்னரே இவர் 2019ம் ஆண்டில் 'சந்திராயன்-3' திட்ட இயக்குனரானார்.

    இந்நிலையில் இவரது கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட 'சந்திராயன்-3' வெற்றிகரமாக செயல்பட்டு வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    'சந்திராயன்-1', 'சந்திராயன்-2' மற்றும் 'சந்திராயன்-3' என மூன்றிலும் தமிழ்நாடு மாவட்டத்தினை சேர்ந்தோரே இயக்குனராக பணியாற்றியுள்ளது தமிழர்களுக்கு பெருமையளித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    தமிழ்நாடு
    விழுப்புரம்
    சந்திரயான் 3

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இஸ்ரோ

    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இந்தியா
    நாசாவுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ நாசா
    ஜுலை 14 விண்ணில் பாய்கிறது சந்திராயன் 3:இஸ்ரோ இந்தியா
    சந்திராயன்-3 திட்டம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் விண்வெளி

    தமிழ்நாடு

    கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் - முதல்வர் தலைமையில் அமைதி பேரணி மு.க ஸ்டாலின்
    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம் திமுக
    தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்ததாக மு.க.ஸ்டாலின் அறிக்கை  நீலகிரி

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் போராட்டம்
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான்
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான்
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025