NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சந்திரயான்-3 பின்னால் இருக்கும் இஸ்ரோ குழுவை பற்றி ஒரு பார்வை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திரயான்-3 பின்னால் இருக்கும் இஸ்ரோ குழுவை பற்றி ஒரு பார்வை
    சந்திரயான்-3 பின்னால் இருக்கும் இஸ்ரோ குழுவை பற்றி ஒரு பார்வை

    சந்திரயான்-3 பின்னால் இருக்கும் இஸ்ரோ குழுவை பற்றி ஒரு பார்வை

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 23, 2023
    02:58 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தோல்வியுற்ற பிறகு, உலகமே, சந்திரயான் 3 தரையிறக்கத்தை எதிர் நோக்கியுள்ளது.

    இந்த திட்டம் வெற்றியடையும்பட்சத்தில், சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்றை உருவாக்கும் இந்தியா என்பது அறிந்ததே.

    ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3, இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது.

    சந்திரயான்-3 ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டுவதற்கு தயாராகி வரும் நிலையில், இந்த லட்சிய சந்திர பயணத்தை சாத்தியமாகிய முக்கிய நபர்களைப் பார்ப்போம்.

    card 2

    சந்திரயான்-3-ன் மூளையாக செயல்பட்டவர்கள்

    இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத்: எஸ் சோமநாத், ஏவுகணை வாகன அமைப்பு பொறியியலில் நிபுணரான இவர், சந்திரயான்-3ஐ சுற்றுப்பாதைக்கு கொண்டு சென்ற ஏவுகணை வாகன மார்க்-3 ராக்கெட்டின் வடிவமைப்பிற்கு உதவினார்.

    சோம்நாத் தனது தற்போதைய பணிக்கு முன், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) மற்றும் திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநராக பணியாற்றினார்.

    இஸ்ரோவிற்கான ராக்கெட் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை இந்த ஏஜென்சிகள் மேற்பார்வையிடுகின்றன.

    இந்தியாவின் முதல் விண்வெளி அடிப்படையிலான சூரியப் பயணமான 'ஆதித்யா-எல்1' மற்றும் இந்தியாவின் முதல் குழுவினர் பயணத்திற்கு தயாராகும் 'ககன்யான் ப்ராஜெக்ட்' ஆகியவற்றையும் அவர் மேற்பார்வையிடுகிறார் .

    card 3

    சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்

    சந்திரயான்-3 திட்ட இயக்குநராக பி.வீரமுத்துவேல், 2019ல் பொறுப்பேற்றார்.

    ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவரான பி.வீரமுத்துவேல், 2019 இல் சந்திரயான்-3 திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்றார். மூன்று தசாப்தங்களாக இஸ்ரோவில் பணியாற்றியவர்.

    சந்திரயான்-2 திட்ட இயக்குநராக இருந்த எம்.வனிதாவின் இடத்திற்கு வீரமுத்துவேல் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தியாவின் நிலவை நோக்கிய விண்வெளி பயணத்திற்கு தலைமை தாங்கிய முதல் இந்திய பெண் வனிதா ஆவார். அவர் தற்போது UR ராவ் செயற்கைக்கோள் மையத்தில் (URSC) துணை இயக்குநராக உள்ளார்.

    சந்திரயான்-3யின் பணி இயக்குனர் மோகன் குமார். இவர் விஎஸ்எஸ்சியில் உள்ள கலவைகள் தயாரிப்பின் தலைவராக உள்ளார்.

    card 4

    வேறு சில குறிப்பிடத்தக்க விஞ்ஞானிகள்

    'இந்தியாவின் ராக்கெட் பெண்' என்று அடிக்கடி அழைக்கப்படும், ரிது கரிதால், சந்திரயான்-3க்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.

    இவர் இதற்கு முன்பு 'மங்கள்யான்' இயக்கத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

    மற்ற குறிப்பிடத்தக்க விஞ்ஞானிகளில் VSSC இயக்குனர், எஸ்.உன்னிகிருஷ்ணன் நாயர் மற்றும் URSC இயக்குனர் எம்.சங்கரன் ஆகியோர் அடங்குவர்.

    இந்தியாவின் செயற்கைக்கோள்களை வடிவமைத்து கட்டமைக்கும் பொறுப்பான யுஆர்எஸ்சி குழுவை சங்கரன் வழிநடத்துகிறார். அவரது நிபுணத்துவம் காரணமாக அவர் பெரும்பாலும் "இஸ்ரோவின் ஆற்றல் மையம்" என்று அழைக்கப்படுகிறார்.

    card 5

    சந்திரயான் 3 திட்டத்தில் இடம்பெற்ற பெண் பொறியாளர்கள்

    சந்திரயான்-3க்கு 54 பெண் பொறியாளர்கள்/விஞ்ஞானிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

    பல ஆண் விஞ்ஞானிகளின் பங்கு பற்றி கூறப்பட்டிருந்தாலும், சந்திரயான்-3 திட்டத்தில் 54 பெண் விஞ்ஞானிகள்/பொறியாளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பெண்கள் இஸ்ரோவில், "பல்வேறு அமைப்புகளின் இணை மற்றும் துணை திட்ட இயக்குனர்கள் மற்றும் திட்ட மேலாளர்கள்" பதவிகளை வகிக்கின்றனர்.

    இவர்கள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான இளம் தொழில்நுட்ப வல்லுனர்களின் திட்டமிடலும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளது. இவர்களின் அபாரமான உழைப்பு தான், நம் இந்தியா நாட்டிற்கு பெருமை சேர்க்க போகிறது என்பதை பெருமிதத்துடன் கூறிக்கொள்வோம் .

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரயான் 3
    சந்திரயான்
    இஸ்ரோ

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான்
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான்
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்

    சந்திரயான்

    வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 3: அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?  சந்திரயான் 3
    நிலவை நோக்கி சந்திரயான் 3-இன் பயணத்துளிகள் சந்திரயான் 3
    சந்திரயான் திட்டங்களை வழிநடத்திய தமிழர்கள் வரிசையில் இணைந்த வீரமுத்துவேல், யார் இவர்? சந்திரயான் 3
    ககன்யான் திட்ட வீரர்களை மீட்கும் ஒத்திகையின் இரண்டாம் நிலையை தொடங்கியிருக்கும் இஸ்ரோ இஸ்ரோ

    இஸ்ரோ

    'சந்திராயன்-3 ஜூலையில் ஏவப்படும்': இஸ்ரோ தலைவர் இந்தியா
    குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் - வெளியான புது அறிவிப்புகள்  தூத்துக்குடி
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இந்தியா
    நாசாவுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ நாசா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025