NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருநெல்வேலியில் அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-மழை வெள்ளத்தில் பாதுகாப்பாக பிறந்த 91 குழந்தைகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருநெல்வேலியில் அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-மழை வெள்ளத்தில் பாதுகாப்பாக பிறந்த 91 குழந்தைகள் 
    திருநெல்வேலியில் அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-மழை வெள்ளத்தில் பாதுகாப்பாக பிறந்த 91 குழந்தைகள்

    திருநெல்வேலியில் அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-மழை வெள்ளத்தில் பாதுகாப்பாக பிறந்த 91 குழந்தைகள் 

    எழுதியவர் Nivetha P
    Dec 22, 2023
    11:54 am

    செய்தி முன்னோட்டம்

    குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.

    இதனால் அம்மாவட்ட மக்கள் கடும் வெள்ளத்தில் சிக்கி கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகம்.

    மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்கிடையே அதி கனமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மூலம் கொடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் திருநெல்வேலியில் கடந்த 17ம் தேதி காலை முதல் நிறைமாத கர்ப்பிணி பெண்கள் குறித்த விவரங்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் அம்மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சேகரிக்கப்பட்டுள்ளது.

    கனமழை 

    ஆட்சியர் கார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு 

    அதன்படி, 696 கர்ப்பிணிகள் நேரடியாக தொடர்புகொள்ளப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

    அம்மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையின் அடிப்படையில் 142 கர்ப்பிணிகள் மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுள் 91 பேருக்கு இந்த பெருமழை, வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் குழந்தைகள் பிறந்துள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 23 பேரில் 13 பேருக்கும், ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்ட 36 பெண்களுள் 14 பேருக்கும் குழந்தைகள் பிறந்துள்ளது.

    அதேபோல், தனியார் மருத்துவமனையில் சேர்ந்த 56 கர்ப்பிணிகளில் 43 பேருக்கும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 37 பேர்களில் 21 பேருக்கும் குழந்தைகள் பிறந்துள்ளது.

    இந்த தகவல்களை அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனமழை
    திருநெல்வேலி
    தூத்துக்குடி
    மருத்துவமனை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கனமழை

    புழல் ஏரியின் தடுப்பு சுவர் சேதம்; கரை உடையும் அபாயம் சென்னை
    சென்னையில் நடக்கவிருந்த பார்முலா 4 கார் பந்தயம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு  கார்
    தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு
    சென்னையில் டிசம்பர்.,3 முதல் 8 வரை கேமராக்களில் பதிவான விதிமீறல் வழக்குகள் ரத்து  போக்குவரத்து காவல்துறை

    திருநெல்வேலி

    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு  காவல்துறை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் காவல்துறை
    பல கோடி மதிப்புள்ள வலம்புரி சங்குகளை விற்க முயற்சி - 6 பேர் கைது  தமிழ்நாடு
    கையில் பாம்புடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை அலற விட்ட நெல்லை பெண்! காரணம் என்ன? தமிழ்நாடு

    தூத்துக்குடி

    தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - 2 மாதத்தில் விசாரித்து முடிக்க மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு  அரசு மருத்துவமனை
    தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ரூ.92.50 கோடி மதிப்பில் 3 மினி டைடல் பூங்கா  தமிழ்நாடு
    ஸ்டர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற தமிழக அரசு முடிவு  தமிழக அரசு
    குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் - வெளியான புது அறிவிப்புகள்  இந்தியா

    மருத்துவமனை

    கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவை சிகிச்சை அறுவை சிகிச்சை
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் காசா
    பிறந்து 4 நாட்களே ஆன சிசுவின்  உடல் உறுப்புகள் தானம் குழந்தைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025