NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருட வந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டிய 80 வயது முதியவர், குவியும் பாராட்டுக்கள் : க்ரைம் ஸ்டோரி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருட வந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டிய 80 வயது முதியவர், குவியும் பாராட்டுக்கள் : க்ரைம் ஸ்டோரி 
    திருட வந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டிய 80 வயது முதியவர், குவியும் பாராட்டுக்கள் : க்ரைம் ஸ்டோரி

    திருட வந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டிய 80 வயது முதியவர், குவியும் பாராட்டுக்கள் : க்ரைம் ஸ்டோரி 

    எழுதியவர் Nivetha P
    Oct 22, 2023
    04:36 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தவார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி:தமிழ்நாடு-திருவாரூர் முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவான் ஓடை பகுதியினை சேர்ந்தவர் வைரக்கண்ணு(80).

    தனிமையில் வசிக்கும் இவருக்கு வருமானம் என்று ஒன்று தனியே இல்லையாம்.

    வெளியூர்களில் இவரது பிள்ளைகள் வேலை செய்து அனுப்பும் சிறியத்தொகை கொண்டே இவர் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இப்பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகமாம்.

    இதன் காரணமாக தனிமையில் வசிக்கும் வைரக்கண்ணு எப்பொழுதுமே தனது வீட்டினை உள்பக்கம் தாலிட்டு தான் வைத்திருப்பார் என்றும் கூறப்படுகிறது.

    இதனிடையே இவரது வீட்டினை நேற்று(அக்.,21)இரவு 4 இளைஞர்கள் கொண்ட கொள்ளையடிக்கும் கும்பல் சூழ்ந்து சுற்றிவளைத்துள்ளது.

    முதலில் இதனை அறியாத வைரக்கண்ணு, சிறிதுநேரத்திற்கு பின்னர் சுதாரித்துக்கொண்டு தனது தற்காப்பிற்காக அரிவாள் ஒன்றினை எடுத்து தனது அருகில் வைத்துக்கொண்டுள்ளார்.

    கொள்ளை 

    கொள்ளையர்களை அரிவாளால் தாக்கிய முதியவருக்கு குவியும் பாராட்டுக்கள் 

    அவர் சந்தேகித்தபடியே, ஒருவர்பின் ஒருவராக 4 பேர் அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

    அதனைக்கண்ட முதியவர் அரிவாள் கொண்டு அவர்களை தாக்கியுள்ளார்.

    பயத்தில் வலிதாங்காமல் அலறிய கொள்ளையர்கள் சத்தம்கேட்டு அப்பகுதியினர் கூடியதையடுத்து, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

    இதுகுறித்து தகவலறிந்து விரைந்த காவல்துறை வைரக்கண்ணு வீட்டினை ஆய்வுச்செய்து திருட்டு மேற்கொள்ள முயற்சி செய்திருப்பதை உறுதி செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

    தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து கொண்டிருக்கையில், இளைஞர் ஒருவர் அரிவாள் வெட்டுப்பட்டு சிகிச்சை பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

    அதன்படி அங்கு விரைந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்துள்ளனர்.

    அதன்படி மற்ற 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

    இச்சம்பவத்தில் தைரியமாக கையாண்ட முதியவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    க்ரைம் ஸ்டோரி
    கொள்ளை
    கைது

    சமீபத்திய

    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு
    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா

    தமிழ்நாடு

    தமிழக அரசு சார்பில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    மருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள் கேரளா
    காவிரி விவகாரம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு மத்திய அரசு
    100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன? விவசாயிகள்

    க்ரைம் ஸ்டோரி

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி கைது
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி காவல்துறை
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  கேரளா
    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  கைது

    கொள்ளை

    சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர்-6 ஆண்டு சிறை  சிங்கப்பூர்
    ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்  பஞ்சாப்
    63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை பலாத்காரம்
    மகாராஷ்டிராவில் 'பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' பட பாணியில் கொள்ளை சம்பவம் மகாராஷ்டிரா

    கைது

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது அமெரிக்கா
    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி - செப்டம்பர் 15ம்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செந்தில் பாலாஜி
    ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மனுதாக்கல் செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025