NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குடிபோதையில் இருந்த டிரைவர்: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்ததால் 6 குழந்தைகள் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    குடிபோதையில் இருந்த டிரைவர்: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்ததால் 6 குழந்தைகள் பலி

    குடிபோதையில் இருந்த டிரைவர்: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்ததால் 6 குழந்தைகள் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Apr 11, 2024
    03:19 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹரியானா மாநிலம் நர்னால் கிராமம் அருகே பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    ஈத்-உல்-பித்ர் பண்டிகைக்கு விடுமுறை விடபட்டபோதிலும் ஜிஎல் பப்ளிக் பள்ளி என்ற பள்ளி இயங்கியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஜிஎல் பப்ளிக் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து கனினாவின் உன்ஹானி கிராமம் அருகே கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்ததாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இது தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக மகேந்திரகரின் காவல் கண்காணிப்பாளர் அர்ஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

    ஹரியானா 

    விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை

    பேருந்தின் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தாரா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, ​​​​"நாங்கள் அவரைக் கைது செய்துள்ளோம், அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வந்த பிறகு தான் அவர் குடிபோதையில் இருந்தாரா இல்லையா என்பதை எங்களால் சரியாகக் கண்டறிய முடியும்" என்று அவர் தெளிவுபடுத்தினார்.

    விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் பேருந்தின் தகுதிச் சான்றிதழ் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியானதாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் காட்டுகின்றன.

    பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததால் தான் இந்த விபத்து நேர்ந்ததாகவும், பல குழந்தைகள் இதனால் படுகாயமடைந்துள்ளதாகவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹரியானா
    விபத்து

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஹரியானா

    கனடாவில் இருந்து வரவழைத்து தன் காதலியை கொன்ற நபர் கைது இந்தியா
    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை - ஹரியானா மாநிலம்  முதல் அமைச்சர்
    வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை; ஹரியானா துணை முதல்வர் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் டெல்லி

    விபத்து

    சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மத்திய அரசின் புதிய திட்டம் இந்தியா
    கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் தம்பதி பரிதாப பலி  கேரளா
    உத்தர பிரதேச நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து: 1 குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி  உத்தரப்பிரதேசம்
    பெய்ஜிங்கில் மெட்ரோ ரயில்கள் மோதல்- 515 பேர் காயம் பெய்ஜிங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025