NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உடல் உறுப்பு தானம் பெறுவதற்கு தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உடல் உறுப்பு தானம் பெறுவதற்கு தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
    உடல் உறுப்பு தானம் பெறுவதற்கு தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பு - சுகாதாரத்துறை செயலாளர்

    உடல் உறுப்பு தானம் பெறுவதற்கு தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

    எழுதியவர் Nivetha P
    Oct 13, 2023
    01:47 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று(அக்.,12) உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    இதனை தலைமை நீதிபதியான எஸ்.வி.கங்காபுர்வாலா துவக்கி வைத்துள்ளார்.

    சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பங்கேற்று உரையாற்றியுள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது, 'உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஸ்பெயின் நாட்டில் தான் அதிகளவு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகளவு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடக்கிறது' என்றும்,

    அதன்படி 'தமிழகத்தில் இதுவரை 36,472 பேர் தங்கள் உறுப்புகளை தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரத்தினை கொடுத்துள்ளனர்' என்றும் தெரிவித்தார்.

    உரை 

    'உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்' - ககன்தீப்சிங் வேண்டுகோள் 

    தொடர்ந்து பேசிய அவர், மாநிலம் முழுவதுமுள்ள 169 மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானங்கள் பெறப்பட்டு தேவைப்படுவோருக்கு பொருத்தப்படுகிறது.

    இந்த அறுவை சிகிச்சைகள் 'விடியல்' என்னும் செயலி மூலம், வெளிப்படைத்தன்மை கொண்டே செய்யப்படுகிறது.

    இந்தாண்டில் மட்டும் 128 நன்கொடையாளர்களால் 733 பேர் பயனடைந்துள்ளனர்.

    மேலும், 6,205 பேர் சிறுநீரகத்திற்கும், 62பேர் நுரையீரலுக்காகவும், 75 பேர் இதயத்திற்காகவும், 443 பேர் கல்லீரலுக்காகவும் என மொத்தம் 6,785 பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெறுவதற்கு காத்திருக்கிறார்கள் என்றும் ககன்தீப் சிங் விவரித்துள்ளார்.

    உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்கு, அரசு மரியாதையுடன் நடக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ள நிலையில், அதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து பலரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    அறுவை சிகிச்சை
    சென்னை உயர் நீதிமன்றம்
    சுகாதாரத் துறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    ஆவின் நிறுவன பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் 50%மாக குறைப்பு  ஆவின்
    கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் - அதிர்ச்சி தகவல்  டெங்கு காய்ச்சல்
    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த குஜராத் மருத்துவர்கள் இந்தியா
    3 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி

    அறுவை சிகிச்சை

    மருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள் கேரளா
    மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்  அரசு மருத்துவமனை

    சென்னை உயர் நீதிமன்றம்

    கோடை காலம் என்பதால் வழக்கறிஞர்கள் கவுன் அணிவதில் விலக்கு - சென்னை உயர்நீதிமன்றம்  சென்னை
    ஆன்லைன் சூதாட்டம் - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    வேங்கைவயல் விவகாரம் - ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  தமிழ்நாடு
    உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமீன் அளித்த சென்னை உயர்நீதிமன்றம்  பா ரஞ்சித்

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025