NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவில் நிபா வைரஸ்: 5 பேருக்கு பாதிப்பு உறுதி, தொடர்பு பட்டியலில் 700 பேர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவில் நிபா வைரஸ்: 5 பேருக்கு பாதிப்பு உறுதி, தொடர்பு பட்டியலில் 700 பேர்
    கேரளாவில் நிபா வைரஸ்: 5 பேருக்கு பாதிப்பு உறுதி, தொடர்பு பட்டியலில் 700 பேர்

    கேரளாவில் நிபா வைரஸ்: 5 பேருக்கு பாதிப்பு உறுதி, தொடர்பு பட்டியலில் 700 பேர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 14, 2023
    01:30 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்ற வாரத்தில், கேரளாவின் கோழிக்கோட்டில், 24 வயதான சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு நிபா வைரஸ் இருப்பது முதல்முதலில் கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இருவர் மரணமடைந்துள்ளனர், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக நேற்று கூறப்பட்டது.

    தற்போது கேரளா மாநிலத்தில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. அதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில், 706 பேர் தொடர்பு பட்டியலில் உள்ளனர் என்றும், 77 பேர் அதிக ஆபத்தான பிரிவில் உள்ளனர் என்றும், இவர்களுள் 153 பேர் சுகாதாரப் பணியாளர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

    13 பேர் தலைவலி போன்ற லேசான அறிகுறிகளுடன் தற்போது மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ள நிலையில், அதிக ஆபத்துள்ள தொடர்புகளை அவர்களது வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கேரளா அரசு அறிவுறுத்தியுள்ளது.

    card 2

    கேரளாவில் விதிக்கப்பட்டுள்ள தடைகள்

    நிபா வைரஸ் பரவலை அடுத்து, கோழிக்கோடு நகரில் திருவிழாக்கள், சமூக நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

    அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் மருந்தகங்கள் மற்றும் சுகாதார மையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.

    கோழிக்கோடு வடகரா தொகுதியில் உள்ள ஒன்பது பஞ்சாயத்துகளில், 58 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

    வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஒருங்கிணைக்க கேரள அரசு 19 முக்கிய குழுக்களை அமைத்துள்ளது.

    தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க தன்னார்வக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிபா வைரஸ்
    கேரளா

    சமீபத்திய

    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்

    நிபா வைரஸ்

    கேரளத்தில் பயங்கரமான நிபா வைரஸால் பரபரப்பு: 7 கிராமங்களில் பள்ளிகள், வங்கிகள் மூடல்  கோழிக்கோடு
    அச்சுறுத்தும் நிபா வைரஸ்: அறிகுறிகளும், தற்காப்பு நடவடிக்கைகளும் என்ன ஆரோக்கியம்

    கேரளா

    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை தமிழ்நாடு
    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு  தமிழ்நாடு
    'பைபர்ஜாய்' புயலால் கேரள பருவமழை பாதிக்கப்படலாம்: வானிலை ஆய்வு மையம்  இந்தியா
    'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025