
யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை: 57 பேர் தேர்ச்சி - 5 ஆண்டுகளில் அதிகம்!
செய்தி முன்னோட்டம்
இந்தாண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இது கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து வந்த மிக அதிகமான தேர்ச்சி எண்ணிக்கையாகும்.
நேற்று வெளியான UPSC தேர்வு முடிவுகளின் முக்கிய புள்ளிவிவரங்கள்:
மொத்த விண்ணப்பதாரர்கள்: 9,92,599
தேர்வு எழுதியோர்: 5,83,213
பிரதானத் தேர்வுக்கு தகுதியடைந்தோர்: 14,627
நேர்முகத் தேர்வுக்கு சென்றோர்: 2,845
தேர்ச்சி பெற்றோர் (தமிழகத்திலிருந்து): 57 2024ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி தொடங்கிய இந்த UPSC தேர்வுகள், ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடந்த நேர்முகத் தேர்வுடன் நிறைவடைந்தது. இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
ரேங்குகள்
தமிழக மாணவர்கள் பெற்ற முக்கிய ரேங்குகள்:
தர்மபுரியை சேர்ந்த சிவசந்திரன் தேசிய அளவில் 23வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
சென்னையை சேர்ந்த ஏ. எஸ். ஜீ. ஜீ தேசிய அளவில் 25வது இடத்தை பெற்றுள்ளார். அவர் தமிழ் இலக்கியத்தை தேர்வு பாடமாக எடுத்து இந்த இடத்தை பிடித்தார் என்பதும் கூடுதல் பெருமை. அவருக்கு IFS ஆவதே விருப்பம் எனத்தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்ற பவித்ரா என்பவர் தேசிய அளவில் 42வது இடத்தினை பெற்றுள்ளார்.
தற்போது மின்வாரியத்தின் ஆணையராக உள்ள ராதாகிருஷ்ணன் IAS-இன் மகன் அரவிந்த் தேசிய அளவில் 80வது இடத்தை பிடித்துள்ளார்.
தகவலின்படி, இந்த ஆண்டில் தமிழகத்திலிருந்து 140 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர், அவர்களில் 57 பேர் இறுதியாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.