NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 மீட்புப்படையினர், 1100 தீயணைப்பு வீரர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 மீட்புப்படையினர், 1100 தீயணைப்பு வீரர்கள்
    தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 மீட்புப்படையினர், 1100 தீயணைப்பு வீரர்கள்

    தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 மீட்புப்படையினர், 1100 தீயணைப்பு வீரர்கள்

    எழுதியவர் Nivetha P
    Dec 01, 2023
    01:22 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் 3ம்.,தேதி புயலாக மாறவுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இப்புயலால் அதிகளவு பாதிப்பு ஏற்படக்கூடும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதனையடுத்து தமிழக பேரிடர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உஷார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பேசியுள்ள பேரிடர் கட்டுப்பாடு மைய அதிகாரி, 'மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஏதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் , '24 மணிநேரமும் செயல்படக்கூடிய அவசரகால செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவுப்படி மக்களின் அளிக்கும் புகார்களுக்கு உடனடி தீர்வுகாணும் வகையில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் தயாராக உள்ளனர்' என்றும் கூறியுள்ளார்.

    மழை 

    புயல் பாதிப்புகளை சீர் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் 

    'புயல் பாதிப்புகளை உடனடியாக சீர் செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அதனை தொடர்ந்து அவர், தமிழகத்தில் பேரிடர் மீட்பு படையினர் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 250 ஊழியர்கள் கொண்டு செயல்படுகின்றனர்.

    அதே போல் 9 குழுக்களாக பிரிக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் 250 ஊழியர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

    இதன் மூலம் 500 பேரிடர் மீட்பு படையினர் புயல் பாதிப்புகள் ஏற்படும் மாவட்டங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே சென்னையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சீர் செய்ய சென்னையில் செயல்பட்டு வரும் 43 தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் 1100 தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மீட்பு பணி
    மு.க ஸ்டாலின்
    சென்னை
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    மீட்பு பணி

    சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன? உத்தரகாண்ட்
    இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள்  உத்தரகாண்ட்
    உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு உத்தரகாண்ட்

    மு.க ஸ்டாலின்

    அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வு - தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    தமிழக முதல்வரை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் இஸ்ரோ
    அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு  தமிழக அரசு
    தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கு ஐ.நா.விருது அறிவிப்பு விருது

    சென்னை

    சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை கனமழை
    சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார்  மருத்துவமனை
    பாடகி சுசீலாவுக்கு கௌரவ முனைவர் பட்டம்- முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார் பாடகர்
    நவம்பர் 25ம் தேதி முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம் ஆவின்

    வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது; நாளை கனமழை பெய்ய வாய்ப்பு கனமழை
    10 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    16 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு: கடும் போக்குவரத்து பாதிப்பு பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025