NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பகீர் சம்பவம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பகீர் சம்பவம் 
    கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பகீர் சம்பவம்

    கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பகீர் சம்பவம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 30, 2023
    12:33 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா-எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள அலுவா அருகே பீகார் மாநிலத்தினை சேர்ந்த தம்பதி தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர்.

    இவர்களது 5 வயது சிறுமி திடீரென கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாயமாகியுள்ளார்.

    இதனையடுத்து அத்தம்பதி அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

    இதனையடுத்து வழக்குப்பதிவுச்செய்த காவல்துறை காணாமல்போன சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    எங்குத்தேடியும் கிடைக்காத அச்சிறுமி, மறுநாள் அலுவா சந்தை-பெரியாறு ஆற்றுப்பகுதியில் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    சிறுமியின் உடலிலும் பிறப்பு உறுப்பிலும் காயங்கள் இருந்துள்ளது.

    இதனையடுத்து சிறுமியின் உடல் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அதன்பின்னர் கழுத்தினை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம், அதிர்ச்சியினை ஏற்படுத்தியதையடுத்து, காவல்துறை அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வுச்செய்து குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

    கைது 

    அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல் 

    விசாரணையில் அவன் பெயர் அஸ்பாக் ஆலம் என்பதும், அவனும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் என்றும், அச்சிறுமியின் பெற்றோர் வசிக்கும் அதேக்குடியிருப்பின் முதல் மாடியில் தங்கி வேலை பார்ப்பவன் என்பதும் தெரியவந்துள்ளது.

    கைது செய்கையில் போதையிலிருந்த ஆலம், நேற்று(ஜூலை.,29)குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.

    இந்த சம்பவத்தில் வேறுசிலருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று சந்தேகிக்கும் காவல்துறை, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சதீசன்,"கேரளாவில் 5 வயது சிறுமிக்குக்கூட பாதுகாப்பு இல்லை என்னும் சூழல் ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள், மதுபானம் தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த மது மற்றும் போதைப்பொருட்களை கட்டுக்குள் வைக்க மாநில அரசால் முடியவில்லை என்றும், இதுகுறித்து அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    கொலை
    பீகார்

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    கேரளா

    கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பாஜக
    வீடியோ பார்க்கையில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பரிதாப பலி!  ஸ்மார்ட்போன்
    கேரளா வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி புகைப்படம் - கடும் கண்டனம்! வந்தே பாரத்
    கேரளா எர்ணாகுளத்தில் டேங்கர் லாரி மீது வாகனம் மோதி விபத்து  இந்தியா

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா

    பீகார்

    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில் இந்தியா
    முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம் இந்தியா
    கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து  கருணாநிதி
    தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025