NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சத்தீஸ்கர் தாக்குதல்: உயிரிழந்த 10ல் 5 போலீஸார் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள் 
    சத்தீஸ்கர் தாக்குதல்: உயிரிழந்த 10ல் 5 போலீஸார் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள் 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    சத்தீஸ்கர் தாக்குதல்: உயிரிழந்த 10ல் 5 போலீஸார் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 28, 2023
    10:15 am
    சத்தீஸ்கர் தாக்குதல்: உயிரிழந்த 10ல் 5 போலீஸார் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள் 
    உயிரிழந்த இந்த 5 பேரும் ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள்.

    சத்தீஸ்கரில் உள்ள தண்டேவாடா மாவோயிஸ்ட் தாக்குதலில் கொல்லப்பட்ட பத்து காவல்துறை அதிகாரிகளில் 5 பேர் முன்பு மாவோயிஸ்டுகளாக செயல்பட்டவர்கள் என்றும், அவர்கள் நல்ல வாழ்க்கைக்காக காவல் படையில் சேர்ந்தனர் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று(ஏப்-27) தெரிவித்தார். கடந்த புதன்கிழமை, சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தின் அரன்பூர் காவல் நிலையப் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் வாகனம் ஒன்றை மாவோயிஸ்டுகள் சக்திவாய்ந்த வெடிகுண்டைப் பயன்படுத்தி வெடிக்கச் செய்ததில், ஒரு டிரைவரும் 10 மாவட்ட ரிசர்வ் காவல்(DRG) வீரர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்த வீரர்களில் ஹெட் கான்ஸ்டபிள் ஜோக சோடி(35), ஹெட் கான்ஸ்டபிள் முன்னா கட்டி(40), கான்ஸ்டபிள் ஹரிராம் மாண்டவி(36), கான்ஸ்டபிள் ஜோகா கவாசி(22), ரகசியப் படை ராஜுராம் கர்தம்(25) ஆகியோர் முன்பு மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள் ஆவர்.

    2/2

    பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல தலைவர்கள் கண்டனம் 

    உயிரிழந்த இந்த 5 பேரும் ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள். பின்னர், சரணடைந்து காவல்துறையில் சேர்ந்தனர் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்(பஸ்தர் ரேஞ்ச்) சுந்தர்ராஜ்.பி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகங்கள் என்றும் நினைவுகூரப்படும் என பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் காவல்துறை மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்துள்ளதாகவும், மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலும் இந்த தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை

    இந்தியா

    ட்விட்டர் பதிவுகளை நீக்க கோரும் டாப் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா! ட்விட்டர்
    உத்தரபிரதேசத்தில் 91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறாத 10ம் வகுப்பு மாணவி  உத்தரப்பிரதேசம்
    கேரளா எர்ணாகுளத்தில் டேங்கர் லாரி மீது வாகனம் மோதி விபத்து  கேரளா
    சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு  சூடான்

    காவல்துறை

    மேற்குவங்கத்தில் பழங்குடியின பெண் பலாத்கார கொலை வழக்கு - 144 தடையினை மீறி காவல்நிலையத்தில் தீ வைப்பு  மேற்கு வங்காளம்
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  சென்னை
    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி இந்தியா
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி

    காவல்துறை

    வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் தமிழ்நாடு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம்: CBCIDயின் FIR அறிக்கை வெளியீடு  திருநெல்வேலி
    காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை  சென்னை
    சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023