NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி
    மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Apr 26, 2023
    04:04 pm

    செய்தி முன்னோட்டம்

    சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் ஒரு ஓட்டுநரும் உயிரிழந்திருக்கிறார்.

    அவர்களின் வாகனம் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனத்தால்(IED) தகர்க்கப்பட்டது.

    மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

    உளவுத்துறையிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்து இந்த மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

    உயிரிழந்த போலீஸார், சத்தீஸ்கர் காவல்துறையின் சிறப்புப் மாவட்ட ரிசர்வ் காவலர்(DRG) படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராடுவதற்கு சிறப்பு பயிற்சி பெற்ற உள்ளூர் பழங்குடியின வீரர்களை கொண்ட காவலர் படை இதுவாகும்.

    இடதுசாரி தீவிரவாதத்தின் மையமான பஸ்தார் மாவட்டத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை இந்த DRG காவல்படை வெற்றிகரமாக முடித்துள்ளது.

    DETAILS

     DRG வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்: சத்தீஸ்கர் முதல்வர்

    "தண்டேவாடாவின் அரன்பூர் காவல் நிலையப் பகுதியில் மாவோயிஸ்ட் கேடர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைக்காக அங்கு சென்ற DRG படையை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 10 DRG வீரர்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் வீரமரணம் அடைந்தனர் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களின் குடும்பத்தாரின் துயரத்தில் பங்கு கொள்கிறோம். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்." என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ட்வீட் செய்துள்ளார்.

    1967ஆம் ஆண்டு முதல், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்படும் நக்சல்கள், மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள பரந்த நிலப்பரப்பின் மீது கட்டுப்பாட்டை கொண்டுள்ளனர்.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இருந்து விடுபட்ட ஏழைகளுக்காக தாங்கள் போராடுவதாக அவர்கள் கூறி வருகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மாநிலங்கள்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி!  கடலூர்
    அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாப்
    WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள் டெல்லி
    ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு  மோடி

    மாநிலங்கள்

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி! இந்தியா
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழக அரசு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு

    காவல்துறை

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறிய நாமக்கல் காவல்துறை தமிழ்நாடு
    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்! சென்னை
    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது தமிழ்நாடு
    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல் தமிழ்நாடு

    காவல்துறை

    தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம் கோவை
    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு இந்தியா
    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025