Page Loader
ஜார்கண்ட்டில் கார் மரத்தில் மோதியதால் 5 பேர் பலி, 5 பேர் காயம்
இந்த மோதலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் கார் முற்றிலுமாக சேதமடைந்தது.

ஜார்கண்ட்டில் கார் மரத்தில் மோதியதால் 5 பேர் பலி, 5 பேர் காயம்

எழுதியவர் Sindhuja SM
Nov 18, 2023
10:58 am

செய்தி முன்னோட்டம்

இன்று அதிகாலை ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் ஒரு திருமணத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த கார், சாலையோர மரத்தில் மோதியதால் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கிரிதிஹ் என்ற இடத்தில் நடந்த ஒரு திருமணத்தில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு ஸ்கார்பியோ காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது, ​​​​ பாக்மாரா என்ற கிராமத்திற்கு அருகே அதிகாலை 3 மணியளவில் விபத்து நடந்தது. இந்த மோதலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் கார் முற்றிலுமாக சேதமடைந்தது.

தக்ஜவாக்

காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காரில் இருந்த 5 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டிகோடியில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்ள தோரியா கிராமத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் டிகோடிக்கு சென்றதாக கிரிதிஹ் சதர் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி (SDPO) அனில் சிங் கூறியுள்ளார். "ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மீதமுள்ள ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டிரைவர் தூங்கியிருக்கலாம், அதனால் தான் இந்த விபத்து நடந்திருக்கிறது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.