NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 10ல் 3 பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகின்றனர்: ஆய்வில் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    10ல் 3 பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகின்றனர்: ஆய்வில் தகவல்
    தொழில் முனைவோரில் 60% பெண்கள் பட்டதாரி பட்டம் பெற்றவர்களாக இருக்கின்றனர்.

    10ல் 3 பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகின்றனர்: ஆய்வில் தகவல்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 21, 2023
    06:43 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரு புதிய கணக்கெடுப்பின்படி, தொழிலில் முனையும் பெண்களில் 57% பேர் 26 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். மேலும், 27% பேர் 36 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

    இந்த பெண்களில் பெரும்பான்மையானவர்கள் படித்தவர்களாகவும், 60% பேர் குறைந்தபட்சம் பட்டதாரி பட்டம் பெற்றவர்களாகவும் இருக்கின்றனர்.

    பிரான்சைஸ் இந்தியா நடத்திய ஆய்வில், இந்தியாவில் 10 பெண்களில் 3 பேர் தொழில் முனைவோர் பதவியை ஏற்க விரும்புவதாக தெரியவந்துள்ளது.

    45% பெண் தொழில்முனைவோர், திருமணமானவர்களாக இருக்கின்றனர். அவர்கள், தங்கள் குடும்பப் பொறுப்புகளையும் வேலையையும் சமமாக பேணுவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    இந்தியா

    கல்வி, அழகு மற்றும் சுகாதாரத் தொழில்களை தேர்ந்தெடுக்கும் பெண்கள்

    டெல்லி, குருகிராம், போபால், லூதியானா, லக்னோ, கவுகாத்தி, பெங்களூரு, கோவா, ஜெய்ப்பூர் மற்றும் புனே ஆகிய முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில், 500 பெண்கள் கலந்து கொண்டனர்.

    பல பெண்கள் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க ஆர்வம் காட்டுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

    பெரும்பாலான பெண் தொழில்முனைவோர், சேவை மற்றும் சில்லறை வணிகத் துறைகளில் கவனம் செலுத்துவதாகவும், கல்வி, அழகு மற்றும் சுகாதாரத் தொழில்கள் மிகவும் பிரபலமான விருப்பமாக இருப்பதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை இஸ்ரோ
    தொடர்ந்து மூடப்படும் வங்கிகள்! இந்திய வங்கிக்கும் பிரச்சினையா? கவர்னர் பளிச் அமெரிக்கா
    தலைமன்னார் To தனுஷ்கோடி : ஐந்தரை மணி நேரத்தில் கடந்து இந்திய நீச்சல் வீரர் சாதனை இந்திய அணி
    இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியுறவுத்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025