NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆண்களை விட பெண்கள் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்: ஆய்வில் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆண்களை விட பெண்கள் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்: ஆய்வில் தகவல்
    'தி கிராண்ட் வுமன் & வொர்க்ப்ளேஸ்' என்ற அறிக்கையை எட்டெக் பிளாட்ஃபார்மான upGrad வெளியிட்டுள்ளது.

    ஆண்களை விட பெண்கள் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்: ஆய்வில் தகவல்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 19, 2023
    10:30 am

    செய்தி முன்னோட்டம்

    பெரும் பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு ஆண்களை விட குறைவாக தான் சம்பளம் வழங்கப்படுகிறது என்று புதிய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

    'தி கிராண்ட் வுமன் & வொர்க்ப்ளேஸ்' என்ற அறிக்கையை எட்டெக் பிளாட்ஃபார்மான upGrad வெளியிட்டுள்ளது.

    சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்பட ஆரம்பித்து நூறு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, இன்னும் ஆண்களுக்கு நிகரான சம்பளம் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது.

    பெரும் பதவிகளில் இருக்கும் பெண்களே இதில் பெரிதாக பாதிக்கப்படுகின்றனர்.

    பெரும் பதவியில் இருக்கும் ஒரு ஆண் 100 ரூபாய் சம்பாதித்தால், அதே பதவியில் இருக்கும் ஒரு பெண் 74 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார் என்கிறது இந்த அறிக்கை.

    இந்தியா

    இந்த புதிய ஆய்வில் கிடைத்திருக்கும் தகவல்கள்

    India Inc இல் வேலை செய்யும் 1,500 க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

    இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பணியிடத்தில் பெண்களை பாதிக்கும் பல்வேறு முக்கியமான பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

    பெண் பணியாளர்கள் விற்பனையில் சிறந்து விளங்குபவர்களாக, அதிக வருவாயை ஈட்டி தருபவர்களாக இருந்தாலும், முதலீடு தொடர்பான முடிவுகள் அவர்களை நம்பி ஒப்படைக்கப்படுவதில்லை.

    இது போன்ற வேலைகள் 65% ஆண்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதே நேரம், 29% பெண்கள் மட்டுமே இது போன்ற முடிவுகளை எடுக்கும் பதவிகளில் இருக்கின்றனர்.

    வேலையை பாதியிலேயே நிறுத்தும் பெண்களில் 58% பேர் குழந்தை வாளர்ப்புக்காக அதை செய்கின்றனர். ஆனால், இப்படி வேலையை பாதியிலேயே நிறுத்தும் ஆண்களில் 48% பேர் மேற்படிப்பிற்காக மட்டுமே அதை செய்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    இந்தியா

    நான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை: ராகுல் காந்தி காங்கிரஸ்
    'பெங்களூர் சீரியல் கில்லிங்': கொலை செய்தவர்களை கண்டறிந்த போலீசார் பெங்களூர்
    உடல் உறுப்பு தானங்களில் முதல் இடத்தில் இருக்கும் கேரளா கேரளா
    வருமான வரியே செலுத்தாத நாடுகள் இவங்க தான்- இவ்வளவு அம்சங்களா? சேமிப்பு திட்டங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025