NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போலி NRI சான்றிதழ் விவகாரம்: சிக்கலில் 44 மருத்துவர்கள்; சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை
    அடுத்த செய்திக் கட்டுரை
    போலி NRI சான்றிதழ் விவகாரம்: சிக்கலில் 44 மருத்துவர்கள்; சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை
    தவறிழைத்த மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை

    போலி NRI சான்றிதழ் விவகாரம்: சிக்கலில் 44 மருத்துவர்கள்; சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 25, 2024
    05:09 pm

    செய்தி முன்னோட்டம்

    போலி NRI சான்றிதழ் வழங்கி மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு பரிந்துரை செய்துள்ளது.

    மருத்துவ மாணவர் சேர்க்கையின் ஒரு பகுதியான சான்றிதழ்களின் ஆய்வின் போது, நடப்பாண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்த 6 பேரின் தூதரக சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.

    அதில் 3 பேர் எம்பிபிஎஸ் இடங்களுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களாவர்.

    இதையடுத்து 6 பேரும் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதுமட்டுமன்றி அவர்களில் மூவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எம்பிபிஎஸ் இடங்களும் ரத்து செய்யப்படுள்ளது.

    போலியாக சான்றிதழ் அளித்த 6 மாணவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #TamilNadu #NEETUG2024#SelectionCommittee
    📢 #NRI ALLOTMENT CANCELLATION #MBBS#FakeCertificate pic.twitter.com/15GYawQQXE

    — M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம் (@MRK_POLLACHI) November 22, 2024

    PG மாணவர்கள்

    முதுகலை மாணவர்களும் போலி NRI சான்றிதழ் விவகாரத்தில் சிக்கியுள்ளனர்

    முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தற்போது தொடங்கியுள்ள நிலையில், அந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்ததில் 44 மாணவர்கள் போலி NRI சான்றிதழ் அளித்தது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க, மருத்துவ கல்வி இயக்குனரகம், முதுநிலை மருத்துவ சேர்க்கை குழு மற்றும் சட்ட வல்லுனர்களுக்கு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

    இந்த 44 மாணவர்களும் இளநிலை மருத்துவ படிப்பில் எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் என்பதால், அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கை அல்லது மருத்துவ கலந்தாய்வின் மூலம் சேர்வதற்கான தீர்வு, சட்ட வல்லுநர்களின் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மருத்துவக் கல்லூரி
    மருத்துவம்
    மருத்துவத்துறை

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    மருத்துவக் கல்லூரி

    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் இந்தியா
    மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு கேரளா
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  செங்கல்பட்டு
    லஞ்சம் பெற்ற விவகாரம்: தேனி அரசு மருத்துவமனை முதல்வர் பணியிடை நீக்கம் தேனி

    மருத்துவம்

    காலையில் வெந்நீருடன் நெய் சேர்த்து பருகுவதின் பயன்கள் என்ன? உணவு குறிப்புகள்
    சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்றதா அப்பல்லோ மருத்துவமனை? வலுக்கும் குற்றச்சாட்டுகள்  இந்தியா
    வலி நிவாரணி மெஃப்டால் "பாதகமான" எதிர்வினைக்கு வழிவகுக்கும்: மத்திய அரசு எச்சரிக்கை மருத்துவத்துறை
    தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆருக்கு திடீர் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை தெலுங்கானா

    மருத்துவத்துறை

    MBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு  பள்ளிக்கல்வித்துறை
    தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும் இந்தியா
    போலி மருந்துகளை அடையாளம் காண, இன்று முதல் அமலாகிறது QR கோட் இந்தியா
    இந்தியளவில் உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சையில் சிறந்த மாநிலம் என தமிழகத்திற்கு விருது தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025