NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு அமலுக்கு வந்தது குடியுரிமைச் சட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு அமலுக்கு வந்தது குடியுரிமைச் சட்டம்

    நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு அமலுக்கு வந்தது குடியுரிமைச் சட்டம்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 11, 2024
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது.

    2019 பொது தேர்தலில் குடியுரிமைச் சட்டத்தை முன்வைத்து தான் ஆளும் பாஜக கட்சி தேர்தல் பிரச்சாரத்தை செய்தது.

    இந்நிலையில், 2024 பொது தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், பாஜக அரசு குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

    பொது தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    டிசம்பர் 11, 2019அன்று நாடாளுமன்றத்தால் CAA மசோதா இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக விவாதங்களும் போராட்டங்களும் பல காலமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மத அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்குவதற்கு இந்த சட்டம் அனுமதிப்பதால் இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியா 

    குடியுரிமைச் சட்டதிற்கு எதிராக நடந்த போராட்டங்கள் 

    இந்த சட்டத்தின் கீழ், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவிற்குள் நுழைந்த முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குடியுரிமையை உடனடியாக வழங்க முடியும்.

    2019 டிசம்பரில் இந்த சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை போராட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழநதனர். அந்த போராட்டங்களுக்கு மத்தியில், இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    இஸ்லாமியர்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் இருந்து வெளியேறும் சிறுபான்மையின மதத்தை சேர்ந்தவர்களை ஆதரிக்கும் நோக்கில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்திருந்தது.

    ஆனால், இது இஸ்லாமியர்களுக்கு எதிரான பாகுபாடு என்றும், இது இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கொள்கைகளை மீறுகிறது என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவில் விலை உயரக்கூடும். என்ன காரணம்? மின்சார வாகனம்
    வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா? ஆரோக்கியம்
    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு
    பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழப்பு பெங்களூர்

    மத்திய அரசு

    பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவுப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி  திமுக
    கத்தாரில் 8 முன்னாள் இந்திய வீரர்களின் மரண தண்டனை சிறைத் தண்டனையாக குறைப்பு- தகவல் கத்தார்
    8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை குறைப்பு; அடுத்தது என்ன? கத்தார்
    மத்திய அரசின் புதிய 'ஹிட் அண்ட் ரன்' சட்டத்தால் என்ன பாதிப்பு? நாடு தழுவிய போராட்டங்களின் பின்னணி இந்தியா

    இந்தியா

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்பு குடியுரிமை (திருத்த) சட்டம்
    "அரசாங்கத்தின் கண்கள் மூடப்பட்டுள்ளன": பொய்யாக விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்  உச்ச நீதிமன்றம்
    இந்தியாவில் 934 பேருக்கு கொரோனா சிகிச்சை  கொரோனா
    கர்நாடகாவில் காங்கிரஸ் 3 ராஜ்யசபா தொகுதிகளில் வெற்றி: குறுக்கு வாக்கு மூலம் பாஜக 1 தொகுதியில் வெற்றி கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025