NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடிக்கும் 4 தமிழக பேராசிரியர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடிக்கும் 4 தமிழக பேராசிரியர்கள்
    உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடிக்கும் 4 தமிழக பேராசிரியர்கள்

    உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடிக்கும் 4 தமிழக பேராசிரியர்கள்

    எழுதியவர் Nivetha P
    Aug 24, 2023
    12:49 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2022ம் ஆண்டில் உலகளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையிலான 2%விஞ்ஞானிகள் பட்டியலினை அமெரிக்கா நாட்டினை சேர்ந்த ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியரான ஜான் லொன்னிடிஸும் அவரது குழுவினரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

    அதன்படி இந்த பட்டியலில், 22 அறிவியல் துறைகளிலும் 176 துணை துறைகளிலும் செயல்பட்டு வரும் உலகிலுள்ள சிறந்த விஞ்ஞானிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    உலகிலுள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், 3,500க்கும் மேலான இந்திய நாட்டினை சேர்ந்த விஞ்ஞானிகள் இதில் இடம்பிடித்துள்ளனர்.

    திண்டுக்கல் 

    கிராம கிராமிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் பெயர் 

    இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    அதன்படி, இந்த பல்கலைக்கழகத்தின் வேதியியல்துறை பேராசிரியர்கள் எஸ்.மீனாட்சி, எம்.ஜி.சேதுராமன், கணிதவியல் துறை பேராசிரியர் பி.பாலசுப்ரமணியம், இயற்பியல் துறை பேராசிரியர் கே.மாரிமுத்து ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது என்பது தமிழகத்திற்கு பெருமை தரும் விஷயமாகும்.

    விவரங்கள் 

    தாவரங்களின் மூலப்பொருட்கள் கொண்டு ஆய்வு 

    இதற்கிடையே, கணிதவியல் பேராசிரியரான பி.பாலசுப்பிரமணியம் செயலாக்க தொழில்நுட்பம் மற்றும் கிரிப்டோகிராஃபி மூலம் நோயாளிகளின் மூளையில் ஏற்படக்கூடிய அதிர்ச்சியினை கண்டறிதல், தரம் குறைந்த படங்களை தெளிவில்லா தர்க்க அணுகுமுறைகளை கொண்டு உயர்தரப்படமாக மாற்றுதல் போன்ற ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார்.

    அவரைத்தொடர்ந்து வேதியியல்துறை பேராசிரியர் எம்.ஜி.சேதுராமன், தாவரங்களின் மூலப்பொருட்களின் இருந்து உருவாகும் சேர்மங்கள் கொண்டு உலோக அரிப்புகளை தடுக்க உதவும் காரணிகளை உருவாக்குவதற்கான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

    வேதியியல் 

    கழிவுநீரில் உள்ள நச்சுக்களை நீக்குவது குறித்த ஆய்வு 

    அடுத்து வேதியியல்துறை பேராசிரியரான எஸ்.மீனாட்சி, பாதரசம், குரோமியம், காரியம், ப்ளூரைடு போன்ற நச்சுத்தன்மைகளை கழுவுநீரில் இருந்து நீக்குவது குறித்த ஆய்வினை செய்து வருகிறாராம்.

    நான்காவதாக இயற்பியல் துறை பேராசிரியர் கே.மாரிமுத்து, அபாயகரமான கதிர்வீச்சினை தடுக்கும் வகையிலான கண்ணாடிகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

    மேலும், பூமியிலுள்ள அரிய தாது வகைகளை கொண்டு செய்யப்படும் கண்ணாடிகள் மூலம் லேசர் ஒளி, வெள்ளை ஒளி போன்றவை உமிழ்வதற்கான ஆய்வினையும் அவர் மேற்கொண்டுள்ளார் என்று தெரிகிறது.

    சிறப்பு 

    தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக பட்டியலில் இடம்பிடித்து சாதனை 

    இதில் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் 4 பேரும் ஒரே பல்கலைக்கழகத்தினை சேர்ந்த பேராசிரியர்கள் என்பதை தாண்டி, கடந்த 2019ம் ஆண்டு முதல் 2020, 2021, 2022 என தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது தான்.

    இந்த சாதனை மூலம் இவர்கள் தற்போதைய தலைமுறையினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அறிவியல்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    திண்டுக்கல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அறிவியல்

    பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது   இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஃபூக்கோவின் ஊசல் எதற்காக நிறுவப்பட்டது நாடாளுமன்றம்
    லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றிய ஜான் குட்டெனௌ காலாமானார் உலகம்
    பால்வெளி மண்டலத்தில் தோன்றிய நியூட்ரினோவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் விண்வெளி

    தொழில்நுட்பம்

    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    பறக்கும் மின் டாக்ஸி.. வடிவமைப்புக்கான ஒப்புதலைப் பெற்றது ePlane Company இந்தியா
    வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை AI-க்கள் மாற்றும்.. ஏன்? செயற்கை நுண்ணறிவு
    5 ரூபாயில் ரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி.. உருவாக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்! அமெரிக்கா

    தொழில்நுட்பம்

    லென்ஸ் இல்லாத AI கேமராவை உருவாக்கிய பொறியாளர்.. எப்படி இயங்குகிறது? செயற்கை நுண்ணறிவு
    மரபணு மூலம் திறமையைக் கண்டறிதல்.. இந்திய-அமெரிக்க தொழிலதிபரின் புதிய ஐடியா! தொழில்நுட்பம்
    பணிநீக்க நிறுவனங்களின் பட்டியலில் புதிதாக இணைந்த ரெட்டிட்! அமெரிக்கா
    தொழில்நுட்ப ஊழியர்கள் இனி அதிக சம்பளத்தை எதிர்பார்க்க முடியாது! இந்தியா

    திண்டுக்கல்

    கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல் தமிழ்நாடு
    ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி காவல்துறை
    தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025