NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் வெள்ளம்:  ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் சிக்கி 3 மாணவர்கள் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் வெள்ளம்:  ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் சிக்கி 3 மாணவர்கள் பலி 

    டெல்லியில் வெள்ளம்:  ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் சிக்கி 3 மாணவர்கள் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 28, 2024
    09:19 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியின் சில பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியது. அதில் சிக்கி மூன்று அரசுப் பணி ஆர்வலர்கள் உயிரிழந்தனர்.

    பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் உள்ள ராவின் ஐஏஎஸ் படிப்பு வட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இதனையடுத்து, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.

    "கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளோம். எங்கள் தடயவியல் குழுக்கள் இங்கு உள்ளன. தடயவியல் சான்றுகள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். வலுவான வழக்குப் பதிவு செய்து உண்மையைக் கண்டறிவதில் உறுதியாக உள்ளோம். இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்தியா 

    ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் பலி 

    அந்த பயிற்சி மையத்தில் நேற்று இரவு 7 மணியளவில் ஒரு அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    செய்தியாளர்களிடம் பேசிய டி.சி.பி ஹர்ஷவர்தன், "சிலர் சிக்கியிருக்கலாம் என தகவல் கிடைத்தது. அடித்தளம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது எப்படி என்று விசாரித்து வருகிறோம். அடித்தளத்தில் மிக வேகமாக வெள்ளம் புகுந்தது. இதனால் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்" என்று கூறியுள்ளார்.

    ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் ஆகிய மூன்று மாணவர்களே வெள்ளம் காரணமாக முதலில் காணாமல் போயுள்ளனர்.

    டெல்லி காவல்துறை, தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) குழுவினர் நடத்திய தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    டெல்லி

    கடும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு  வெப்ப அலைகள்
    மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது அரவிந்த் கெஜ்ரிவால்
    அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு அரவிந்த் கெஜ்ரிவால்
    காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் டெல்லி அமைச்சர் அதிஷி  ஆம் ஆத்மி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025